செய்திகள் :

Ind vs Pak: மீண்டும் நேருக்கு நேர் மோதும் இந்தியா, பாகிஸ்தான்; SKY & Co கைகுலுக்குமா, அவமதிக்குமா?

post image

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பைத் தொடர் சூப்பர் 4 சுற்றை எட்டியிருக்கிறது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் இந்தச் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன.

சூர்யகுமார் யாதவ் - குல்தீப் யாதவ்
சூர்யகுமார் யாதவ் - குல்தீப் யாதவ்

சூப்பர் 4 சுற்றில் நேற்று (செப்டம்பர் 20) நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது வங்கதேசம்.

இன்று (செப்டம்பர் 20) இரண்டாவது போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவிருக்கின்றன.

சாதாரணமாகவே இந்தியா vs பாகிஸ்தான் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்குரிய போட்டியாக மாற்றிவைக்கப்பட்டிருக்கும் சூழலில், லீக் சுற்றில் பாகிஸ்தானுடனான போட்டியில் இந்திய வீரர்கள் செய்த செயல் இன்றைய போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது.

அதாவது, லீக் சுற்றில் நடைபெற்ற போட்டியில் டாஸின்போது இரு அணியின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. அதேபோல், போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற போது களத்தில் இருந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ்தான் வீரர்களிடம் கைகுலுக்காமல், மறுமுனையில் இருந்த ஷிவம் துபேவை அழைத்துக்கொண்டு நேராக பெவிலியனுக்குச் சென்றார்.

ind vs pak - Asia Cup
ind vs pak - Asia Cup

போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில், பாஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நாங்கள் நிற்கிறோம் என்று கைகுலுக்காமல் போனதற்குக் காரணம் தெரிவித்தார்.

இவர் மட்டுமல்லாது பிசிசிஐ அதிகாரியொருவர், "எதிரணி வீரர்களிடம் கைகுலுக்க வேண்டுமென எந்தச் சட்டமும் இல்லை" எனவும், பிசிசிஐ செயலாளர் தேவஜித் சாய்கியா, "விரோத நாட்டின் கூச்சல்களுக்குக் கவனம் செலுத்த வேண்டாம்" எனவும் ஆணவத் தொனியில் கருத்து தெரிவித்தனர்.

எனவே, இன்றைய போட்டியில் யார் வெற்றிபெறப்போகிறார்கள் என்பதை விட யார் வெற்றி பெற்றாலும் இரு அணி வீரர்களுக்கும் கைகுலுக்கிக் கொள்வார்களாக என்பதுதான் இருநாட்டு ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

Neeraj Chopra: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெளியேற்றம்; நடந்தது என்ன?

உலக தடகள சாம்பியன்ஷிப் 2025 தொடரில், ஈட்டி எறிதல் போட்டி பரபரப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, முதலில் நடந்த தகுதிச் சுற்றில் ஈட்டியை 80 மீட்டருக்கும் அதிகமாக எறிந்து, நேரடியாக இற... மேலும் பார்க்க

'படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமமாக இருக்கிறது'- உலக சாதனைப் படைத்த உசைன் போல்ட் வருத்தம்

ஒலிம்பிக் தடகளப்போட்டிகளில் சாதனைப் படைத்த உசைன் போல்ட் தற்போது படிக்கட்டுகளில் ஏறி இறங்குவதற்கு சிரமமாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். ஜமைக்கா நாட்டை சேர்ந்த தடகள வீரர் உசைன் போல்ட். 100 மீட்... மேலும் பார்க்க

ஸ்கேட்டிங்கில் உலக சாம்பியன் பட்டம்; சாதனை படைத்து அசத்திய தமிழக வீரர்!

சீனாவில் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஸ்கேட்டிங் வீரரான ஆனந்த குமார் பங்கேற்று சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்திருக்கிறார்.உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் ... மேலும் பார்க்க

கைகுலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; பாகிஸ்தான் கேப்டன் அதிருப்தி! - ஆசியக் கோப்பையில் நடந்தது என்ன?

'இந்தியா vs பாகிஸ்தான்'ஆசியக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி முடிந்த பிறகு, பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய அணியின் வீரர்கள் கைகுலுக்க மறுத்த சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.India vs... மேலும் பார்க்க

Ind Vs Pak: எதிர்ப்புகளைத் தாண்டி மோதும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள்! வெற்றி யார் பக்கம்?

இன்று துபாயில் நடக்கும் ஆசிய கோப்பை 6-வது லீக் ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்கின்றன. இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் கிரிக்கெட் போட்டி என்றாலே ஆர்வத்திற்கும், விறுவிறுப்பிற்கும் பஞ்சமி... மேலும் பார்க்க

FMI MiniGP: ஜெர்மனியில் வெற்றி; அடுத்தது உலகக்கோப்பை தான் - அஜித் வாழ்த்திய இந்த இளம் ஹீரோ யார்?

சென்னையைச் சேர்ந்த ஜேடன் இம்மானுவேல் என்ற 13 வயது சிறுவன் FMI மினி ஜிபி மோட்டார் பைக் பந்தயத்தில் மூன்றாவது இடம் வென்றதைத் தொடர்ந்து, நடிகரும் கார் பந்தய வீரருமான அஜித் குமார், உலக அளவிலான பந்தயத்தில்... மேலும் பார்க்க