IPL 2025: "தோனி அல்ல; இவருடைய கேப்டன்சியில் விளையாடுவதே என் விருப்பம்" - கனவைப் பகிரும் ஷஷாங்க் சிங்
வெளியூர் சண்ட போதும், இனி உள்ளூர் சண்ட போடுவோம் என சாம்பியன்ஸ் ட்ராபி முடிந்த கையோடு, வருகின்ற சனிக்கிழமை தொடங்கும் ஐபிஎல் தொடரை வரவேற்கக் காத்திருக்கின்றனர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள். எப்போதும் போல, இந்த முறை கப் அடிப்போம் என்று ஆர்.சி.பி நம்பிக் கொண்டிருக்க, நாங்களும் அதுக்குதான் ஆட்டத்துல இருக்கோம் என்று புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் ஒன்றை விட்டுக்கொடுக்காத பஞ்சாப் கிங்ஸும் தவறாமல் போட்டிக்கு வருகிறது.

ஆனால், இம்முறை கடந்த ஆண்டு கொல்கத்தாவுக்குக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரின் தலைமை, மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸின் கம்பேக், சஹால் - அர்ஷ்தீப் கூட்டணி, 2024 சீசனில் ரூ. 20 லட்சத்துக்குத் தவறாக ஏலத்தில் எடுத்து இப்போது தவிர்க்க முடியாத வீரராக ரூ. 5.50 கோடிக்குத் தக்கவைக்கப்பட்ட மிடில் ஆர்டர் நம்பிக்கை ஷஷாங்க் சிங் என டஃப் கொடுக்கும் அணியாகக் காட்சியளிக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.
இந்த நிலையில், ஷஷாங்க் சிங் யாருடைய கேப்டன்சியில் தான் விளையாட ஆர்வமாக இருக்கிறார் என்பதைத் தெரிவித்திருக்கிறார். யூடியூப் சேனல் நிகழ்ச்சியொன்றில் பேசிய ஷஷாங்க் சிங், "ரோஹித் தனது வீரர்களை சப்போர்ட் செய்வதாகவும், நிறைய வாய்ப்புகள் கொடுப்பதாகவும் எல்லோரும் கூறுகின்றனர். அவர் ஸ்மார்ட்டான கேப்டன்.

யாருடைய கேப்டன்சியின் கீழ் நீங்கள் விளையாட வேண்டும் என்று என்னை நீங்கள் கேட்டால், அது நிச்சயம் ரோகித் சர்மாவாகத்தான் இருக்கும். அவர் மும்பையைச் சேர்ந்தவர். அவருடன் ஒருமுறை இணைந்து விளையாடியிருக்கிறேன். ஆனால், அப்போது அவர் கேப்டன் இல்லை. எனவே, அவருடைய கேப்டன்சியில் நான் விளையாட விரும்புகிறேன். அதுவே என் விருப்பம்" என்று கூறினார்.
வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |
Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |
80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks