செய்திகள் :

``ISI தொடர்பு; பாகிஸ்தானுக்கு உளவு..'' - ஜோதி மல்ஹோத்ராவுக்கு நெருக்கமான யூடியூபர் பஞ்சாப்பில் கைது

post image

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சமீப காலமாக ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் போர்க்கப்பல்களை உளவு பார்த்து பாகிஸ்தானுக்கு தகவல் அனுப்பிய பொறியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது பஞ்சாப்பில் ஒரு யூடியூப்பர் பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். ஜஸ்பிர் சிங் என்ற அந்த நபர் பஞ்சாப்பின் ரூப்நகரில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் நடத்தும் ஜான்மகால் வீடியோ என்ற யூடியூப் சேனலில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இது குறித்து பஞ்சாப் டிஜிபி கெளரவ் யாதவ் கூறுகையில், ''ஜஸ்பிர் சிங் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்பை சேர்ந்த சாகிர் என்பவரை தொடர்பு கொண்டு இந்தியாவில் உளவு பார்த்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

ஏற்கெனவே பாகிஸ்தானுக்காக உளவுபார்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள பெண் யூடியூப்பர் ஜோதி மல்ஹோத்ராவிற்கு மிகவும் நெருக்கமானவரான ஜஸ்பிர் சிங், பாகிஸ்தான் தூதர அதிகாரி டேனீஷ் என்பவருடனும் நெருங்கிய தொடர்பு வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்பிர் சிங்கும் பாகிஸ்தானுக்கு 3 முறை சென்று வந்துள்ளார். பாகிஸ்தானுக்கு சென்றபோது அந்நாட்டு ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசியிருக்கிறார். அதோடு அவரது மொபைல் போனில் பல பாகிஸ்தான் நம்பர்கள் இருக்கிறது. அந்த நம்பர்களை ஆய்வு செய்து வருகிறோம். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் நடந்த பாகிஸ்தான் தேசிய தினத்திலும் ஜஸ்பிர் சிங் பங்கேற்றுள்ளார்.

ஜோதி மல்ஹோத்ரா

ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டவுடன் தான் பிடிபடுவதை தவிர்க்கும் வகையில் ஜஸ்பிர் சிங் பாகிஸ்தான் தொடர்புகளை அழிக்க முயற்சி செய்துள்ளார்'' என்று தெரிவித்தார்.

முன்னதாக ஆப்ரேசன் சிந்தூரின் போது ராணுவ நடமாட்டம் குறித்த தகவல்களை சேகரித்து பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டதாக பஞ்சாப்பில் தரன் என்பவர் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பள பாக்கியை கேட்ட டிரைவரை கத்தியால் குத்திய பாலிவுட் இயக்குநர்? - மும்பை போலீஸ் விசாரணை

பாலிவுட்டில் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் இருப்பவர் மணீஷ் குப்தா. இவரிடம் மொகமத் லஷ்கர் என்பவர் டிரைவராக இருந்தார். மூன்று ஆண்டுகள் டிரைவராக பணியாற்றி வந்த மொகமத்திற்கு இயக்குனர் மணீஷ் சரியான நேர... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: ஆன்லைன் ரம்மியில் பணம் இழப்பு; கண்டித்த கணவர் - கோபத்தில் மகளை கொன்று தாயும் தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம், பூவரசங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (28). இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஸ்ரீகா (24). இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தத... மேலும் பார்க்க

சென்னை: 'தடாவில் தொடங்கிய 'வடை' தகராறு' - மயிலாப்பூரில் நடந்த கொலை முயற்சி; என்ன நடந்தது?

சென்னை, மயிலாப்பூர் பகுதியில் வசித்து வரும் நண்பர்களான 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் கடந்த 04.05.2025 அன்று இரவு வீட்டினருகே பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்பகுதியைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

சென்னை: லவ் டார்ச்சர்; இளம்பெண் வீட்டில் ரகளை - இளைஞரை கைது செய்த போலீஸ்!

சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அந்தப் பெண்ணின் மூத்த மகளை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கோகுல்குமார் என்ற இளைஞர் காதலித்து வந்திருக்கிறார். அதற்... மேலும் பார்க்க

பீகாருக்கு மாற்றி அனுப்பப்பட்ட திருத்தணி தொழிலாளரின் சடலம்; மருத்துவர் இடமாற்றம்; பின்னணி என்ன?

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி தாலுகா அருகிலுள்ள பி. ஆர். பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூலித் தொழிலாளரான இவர், குடும்பத் தகராறில் மதுவில் விஷம் கலந்து குடித்தார்.அதனால் ராஜேந்திரனை அவர... மேலும் பார்க்க

அடுத்தடுத்து மோசடி புகார்; வழக்குபதிவு - சிக்கலில் அதிமுக நிர்வாகி, தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார்?

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார். இவரின் மாமியார் சரஸ்வதி மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருக்கிறார். அசோக் குமாரும் ஆரம்பத்தில் பாஜகவில் இருந்த நிலையில், பிறகு அதிமுகவி... மேலும் பார்க்க