செய்திகள் :

Japan Zoo: "ஆண்கள் தனியே வர அனுமதியில்லை..." - பாலியல் சீண்டல் புகார்களால் பூங்கா நிர்வாகம் அதிரடி

post image

ஜப்பானில் உள்ள பூங்கா ஒன்று ஆண்கள் துணையில்லாமல் வருவதற்குத் தடைவிதித்துள்ளது.

இந்த விலங்கியல் பூங்காவுக்கு வருகை தரும் ஆண்கள் பெண் பார்வையாளர்களையும், பணியாளர்களையும், பாலியல் ரீதியாகச் சீண்டும் சம்பவங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ஜப்பானில் உள்ள தோச்சிகி என்ற மாகாணத்தில் கடந்த மார்ச் 2024ல் திறக்கப்பட்டுள்ளது ஹீலிங் பெவிலியன் பூங்கா. இங்கு வரும் பார்வையாளர்கள் விலங்குகளைக் கொஞ்சவும், தடவிக் கொடுக்கவும், உணவளிக்கவும், விளையாடவும் முடியும்.

க்யூட்டான முயல்கள், ஆடுகள், நீர்நாய்கள் (Otters) மற்றும் பூனைகள் இங்கு உள்ளன. இங்குள்ள நாய் பூங்காவுக்குப் பார்வையாளர்கள் தங்களது செல்ல பிராணியையும் அழைத்து வரலாம்.

மிசா மாமா என்ற பெண்தான் இந்த பூங்காவின் உரிமையாளர். இவரது எக்ஸ் கணக்கில் ஜனவரி 26ம் தேதி வெளியிட்ட பதிவில், 'இனி ஆண்கள் மட்டும் வந்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என அறிவித்துள்ளார்.

"நான் அகங்காரத்துடனோ, தவறாகவோ இந்த முடிவை எடுக்கவில்லை. பலர் அபாயகரமான சிந்தனையுடன் வருகின்றனர். இதனால் மன உளைச்சல்தான் மிஞ்சுகிறது. அவர்களது செயலால், என் மனதில் வலியை உணர்கிறேன். நாங்கள் ஒன்றும் மது விடுதி வைத்திருக்கவில்லை. எனவே நீங்கள் உண்மையாகவே விலங்குகளுடன் நேரம் செலவழிக்க விரும்பினால் உங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் அழைத்துவாருங்கள்" என அவர் கூறியுள்ளார்.

"ஆண்கள் நிச்சயமாகக் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடன் வரவேண்டும்" என எழுதப்பட்ட பதாகையை வெளியே வைத்துள்ளனர்.

மேலும் மிசா, "என்னால் முடிந்தால் தவறாக நடந்துகொள்பவர்களை மட்டும் நிறுத்தியிருப்பேன். ஆனால் ஒரு பெண்ணாக இருந்து நான் இந்த Zoo-வை நடத்துவதால் பழிவாங்கும் எண்ணத்துடன் பலரும் வருகின்றனர்" எனக் கூறியுள்ளார்.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

டெல்லி: அடுத்தடுத்து வந்த 100 பீட்ஸாக்கள்; எல்லாம் கேஷ் ஆன் டெலிவரி! - Ex லவ்வரை அதிர வைத்த பெண்

காதலில் பிரேக்அப் ஏற்பட்டுவிட்டால், சில சந்தர்ப்பங்களில் இரண்டு பேரில் ஒருவர் எதாவது வழியில் மற்றவர்களை பழிவாங்குவதுண்டு. டெல்லியில் அது போன்று பிரேக்அப் ஆன பெண் ஒருவர் தனது காதலனை நூதன முறையில் பழிவா... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு டு ஆர்.சி.பி நியூ கேப்டன் - இந்த வார கேள்விகள்

த.வெ.க தலைவர் விஜய்க்கு மத்திய அரசின் பாதுகாப்பு, பி.எஸ்.என்.எல் (BSNL) லாபம், குடியரசுத் தலைவர் ஆட்சி, அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா, ஆர்.சி.பி அணிக்குப் புதிய கேப்டன் நியமனம் என இந்த வார சம்பவ... மேலும் பார்க்க

இத்தாலிக்குத் தத்து போனவர் 38 ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்பிய கதை... தேனியில் நெகிழ்ச்சி சம்பவம்!

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டையைச் சேர்ந்தவர் உத்தாண்டபிள்ளை. திருமணம் முடிந்த சில வருடங்களிலேயே இவருடைய மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார். இவருக்குப் பாலமுருகன் என்ற... மேலும் பார்க்க

`நட்பு காதலாக மாறி..!’ - சுஷ்மிதா சென் உடனான உறவு முறிவு; புதிய காதலியை அறிமுகம் செய்த லலித் மோடி

இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி அறிமுகம் செய்யப்பட்டபோது அதன் தலைவராக இருந்தவர் லலித் மோடி. அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மோசடி செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, இந்தியாவில் இருந்து வெளி... மேலும் பார்க்க

Dhoni: "என் காதல் தீராமல் சேமித்தேனே என் ஆழ்மனம் நீயாக..." - தோனி, சாக்‌ஷி க்ளிக்ஸ் | Photo Album

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!https://tinyurl.com/Velpari-Vikatan-Play மேலும் பார்க்க

`பேபி, இனி உலகம் முழுவதும் பறக்கலாம்.!’ - சிறையில் இருந்தும் ஜாக்குலினுக்கு விமானம் பரிசளித்த சுகேஷ்

டெல்லியை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்களிடம் தான் அரசு அதிகாரி, அமைச்சருக்கு வேண்டப்பட்டவர் என்று கூறி மோசடி செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாக கைது செய்யப்பட்டு டெல... மேலும் பார்க்க