செய்திகள் :

Karur: தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்; கரூர் துயரத்திற்கு தீர்மானம் வாசிப்பு

post image

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14 ஆம் தேதி முதல் அக்டோபர் 17ஆம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு நேற்று (அக்டோபர் 13) அறிவித்திருந்தார்.

அந்தவகையில் இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கூடியிருக்கிறது. தொடக்க நாளில், கரூரில் தவெக பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம், நாகலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவு உள்ளிட்ட பல துயரமான சம்பவங்களுக்கும் சட்டசபையில் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்திருக்கிறார்.

சட்டசபை
சட்டசபை

துயரத்தை வெளிப்படுத்தும் விதமாக, சட்டசபையில் ஒரு நிமிடம் மௌனம் கடைப்பிடிக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டத் தொடரில் முக்கிய எதிர்க்கட்சிகள் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை மையமாகக் கொண்டு அரசு மீதான கேள்விகளை எழுப்பவிருக்கின்றன.

அதோடு, கோல்ட்ரிப் இருமல் மருந்து விவகாரம், கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் ஏற்பட்ட குறைபாடுகள், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான தயாரிப்புகள் ஆகியவை குறித்தும் தீவிர விவாதங்கள் நடைபெற வாய்ப்புள்ளன.

"இன்னும் 176 நாள்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" - சொல்கிறார் நயினார் நாகேந்திரன்

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற பிரசார பயணத்தை மதுரையில் தொடங்கிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், இரண்டாவது நாளாக சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். காரைக்குடி நிகழ... மேலும் பார்க்க

புதுச்சேரி: இந்திரா – ராஜீவ் காந்தி சதுக்கம் இடையே ரூ.436 கோடியில் மேம்பாலம்! - எப்போது முடியும்?

`30 ஆண்டுகளுக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படாது...’சுற்றுலா மாநிலமான புதுச்சேரிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, வார இறுதி நாட்களில் மட்டுமே சுற்றுலாப் பயணிகளின் வருகை இருக்கும். ஆனால் சமீபகாலமாக சுற்ற... மேலும் பார்க்க

கேரளா: மத்திய அரசை விமர்சித்து பதவி விலகிய முன்னாள் ஐஏஎஸ் கண்ணன் கோபிநாதன் காங்கிரஸில் இணைந்தார்

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் கண்ணன் கோபிநாதன். இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர் தாத்ரா நகர் - ஹவேலி கலெக்டராக இருந்தார். கேரளத்தில் 2018-ம் ஆண்டு மழை வெள்ள பிரளயம் ஏற்பட்டபோது மக்களோடு மக்களாக இற... மேலும் பார்க்க

திராவிட மாடலா? பழமைவாத மாடலா? - ஜி.டி.நாயுடு பாலமும் சில கேள்விகளும்!

ஜி.டி.நாயுடு மேம்பால சர்ச்சை! கோவை அவினாசியில் திறக்கப்பட்டிருக்கும் தமிழகத்தின் மிக நீண்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் என தமிழக அரசு பெயரிட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி பால... மேலும் பார்க்க