Guru Mithreshiva: 'பணம் இருந்தால் மகிழ்ச்சி வராது, மகிழ்ச்சி இருந்தால் பணம் வரும...
Kerala: சுரேஷ் கோபி நடித்த சினிமாவை வெளியிட தடை; JSK பெயரால் சர்ச்சை; நடப்பது என்ன?
பிரவீன் நாராயணன் இயக்கத்தில் சுரேஷ்கோபி கதாநாயகனாக நடித்துள்ள சினிமா ஜானகி vs ஸ்டேட் ஆஃப் கேரளா. இந்த சினிமாவை ஜே.எஸ்.கே என விளம்பரப்படுத்திவருகிறது படக்குழு.
ஜே.எஸ்.கே சினிமாவில் அபமா பரமேஸ்வரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நீதிமன்ற வாதங்களுடன் கூடிய திரில்லர் காட்சிகள் இடம்பெற்றுள்ள இந்த சினிமாவில் சுரேஷ்கோபி வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனுபமா பரமேஸ்வரன் ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நாயகிக்கு நீதிபெற்றுக்கொடுக்கும் விதமாக சினிமாவின் கதை அமைந்துள்ளது. யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட இந்த சினிமா இன்று (ஜூன் 27) ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தை வெளியிட சென்சார் போர்டு அனுமதி அளிக்கவில்லை.
சினிமா டைட்டிலிலும், கதாநாயகியின் கதாபாத்திரத்தின் பெயருமான ஜானகி என்ற பெயரை நீக்க வேண்டும் என சென்சார்போர்டு ஏற்கெனவே கூறியிருந்தது. அதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருந்தது.

ஜானகி என்பது பெண் தெய்வமான சீதாவின் மற்றொரு பெயர் எனவும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்ணின் பெயர் ஜானகி என இருப்பது சரியல்ல எனவும் சென்சார் போர்டு கருத்து தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜானகி என்ற பெயரை நீக்க வேண்டும் என்பதில் சென்சார்போர்டு உறுதியாக இருந்தது. இதையடுத்து இன்று படம் ரிலீஸ் செய்யப்படவில்லை.
இதற்கிடையே ஜே.எஸ்.கே சினிமாவை வெளியிட அனுமதிக்க வேண்டும் என படக்குழுவினர் கேரளா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணையின்போது ரிவியூ கமிட்டி சினிமாவை பார்க்க உள்ளதாக சென்சார்போர்டு தெரிவித்திருந்தது.
இதையடுத்து ஜே.எஸ்.கே சினிமாவை சென்சார் போர்டு ரிவியூ கமிட்டி நேற்று முழுமையாக பார்த்தது. கதைக்களம் மும்பை என்பதால் ஜானகி என பெயரிட்டதாக படக்குழு ரிவியூ கமிட்டியிடம் தெரிவித்திருந்தது. அனாலும், ஜானகி என்ற பெயரை மாற்ற வேண்டும் என ரிவியூ கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில் ஜே.எஸ்.கே சினிமா வெளியிடுவது குறித்த மனு மீதான விசாரணை நாளை மீண்டும் ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே வரும் திங்கள்கிழமை திருவனந்தபுரதில் உள்ள சென்சார் போர்டு அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக சினிமா தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நடிகரும் மத்திய அமைச்சருமான சுரேஷ்கோபி கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.