செய்திகள் :

Kerala: கேஷியரின் கழுத்தில் கத்தி வைத்து பெடரல் வங்கியில் கொள்ளை; கேரளாவை அதிர வைத்த தனி ஒருவன்

post image

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள சாலக்குடி பேட்டை பகுதியில் பெடரல் வங்கி கிளை உள்ளது. அங்கு நேற்று மதியம் 2 மணிக்கு பைக்கில் வந்த ஹெல்மட் அணிந்த நபர் வங்கிக்குள் நுழைந்தார். முகத்தை முழுமையாக மூடியிருந்த அவரது முதுகில் பேக் கிடந்துள்ளது.

கேஷ் கவுண்டரை அடித்து உடைத்து பெண் கேஷியரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார். அங்கிருந்த 2 ஊழியர்களைக் கழிவறைக்குள் வைத்துப் பூட்டினார். பின்னர் 15 லட்சம் ரூபாய் கொள்ளையடுத்துச் சென்றார். அவர் யார் என்று தெரியவில்லை. அந்த சமயம் உணவு இடைவேளை என்பதால் பெரிய அளவு வாடிக்கையாளர்களோ, ஊழியர்களோ இல்லை. வங்கிக்கு செக்யூரிட்டியும் இல்லை எனக் கூறப்படுகிறது. 

பைக்கில் வந்த நபர்

இதுகுறித்து சாலக்குடி போலீஸார் கூறுகையில், "கொள்ளையடிக்க வந்த நபர் காய்கறி நறுக்கும் கத்தியைக் காட்டி கேஷியரை மிரட்டி உள்ளார். வங்கியில் 15 லட்சம் ரூபாய் வீதம் 3 அடுக்குகளாக 45 லட்சம் ரூபாய் வைக்கப்பட்டிருந்தது. ஏ.டி.எம்-களில் வைப்பதற்குக் கொண்டு செல்வதற்காக அந்த பணம் வைக்கப்பட்டிருந்தது.

கொள்ளையடிக்க வந்தவர் 15 லட்சம் ரூபாயை மட்டும் எடுத்து பையில் வைத்துக்கொண்டு சென்றுவிட்டார். ஏன் மொத்த பணத்தையும் எடுக்கவில்லை என்பது குறித்துத் தெரியவில்லை. அவர் கேஷ் கவுண்டர் சாவியை இந்தி மொழியில் பேசி கேட்டுள்ளார். அதனால் மட்டுமே அவர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற முடிவுக்கு வந்துவிட முடியாது. சுமார் 3 நிமிடத்துக்குள் அவர் வங்கிக்குள் இருந்து பணத்தை எடுத்துச் சென்றுவிட்டார். அவரது நடவடிக்கையைப் பார்த்தால் அந்த வங்கியைப் பற்றி ஏற்கனவே தெரிந்தவர்தான் எனச் சந்தேகிக்கிறோம்.

சாலக்குடி வங்கி கொள்ளை சி.சி.டி.வி காட்சி

கொள்ளையடிக்க வந்தவர் எந்த பக்கம் சென்றார் என்ற தகவல் கிடைத்துள்ளது. கேரளா மட்டும் அல்லாது வெளி மாநிலங்களிலும் ரயில்வே நிலையங்கள் அலர்ட் செய்யப்பட்டுள்ளன. அவருக்கு வங்கியிலிருந்தோ, வெளியிலிருந்தோ யாராவது உதவினார்களா என்பது பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

அதே சமயம் கொள்ளை நடந்த சம்பவத்தில் வங்கி தரப்பில் எந்த தவறும் நடக்கவில்லை என பெடரல் வங்கி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்' பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்! 

https://tinyurl.com/Velpari-Vikatan-Play

`இரட்டை கொலைக்கு மது விற்பனை காரணமில்லை' - மயிலாடுதுறை போலீஸார் விளக்கம்!

மயிலாடுதுறை அருகே உள்ள முட்டம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் ஹரிஷ் (25). பாலிடெக்னிக் முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். சீவிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி சக்தி (20) கல்லூரி ஒன்றில் இன்ஜினீயர... மேலும் பார்க்க

திருநள்ளாறு: சனீஸ்வரர் கோயிலில் போலி இணையத்தளம், பிரசாதம் - கோடிக்கணக்கில் சுருட்டிய குருக்கள் கைது

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில்புதுச்சேரி, காரைக்காலில் இருக்கும் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கிலும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்க... மேலும் பார்க்க

நாட்டுவெடிகுண்டு வைத்து வேட்டையாடப்பட்ட கடமான் - கைதானவர் மோதிரத்தை விழுங்கி தற்கொலை முயற்சி

நெல்லை மாவட்டம், களக்காடு அருகேயுள்ள பத்மநேரி காட்டுப் பகுதியில் கடமான் ஒன்று முகம் சிதைந்த நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதாக களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை... மேலும் பார்க்க

மயிலாடுதுறை இரட்டைக்கொலை: "சாராய விற்பனையைத் தட்டிக்கேட்டதுதான் காரணமா?" - காவல்துறை சொல்வதென்ன?

சாராய வியாபாரிகளின் அட்டூழியத்தைத் தட்டிக் கேட்டதாக மாணவர் மற்றும் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் அருகே முட்... மேலும் பார்க்க

`இனி யாரும் எதிர்த்து கேட்க கூடாது’ - சாராய விற்பனையை தட்டி கேட்ட கல்லூரி மாணவர் உட்பட 2 பேர் கொலை

மயிலாடுதுறை அருகே உள்ள முட்டம் கிராமம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஹரிஷ்(25). பாலிடெக்னிக் முடித்து விட்டு வேலை தேடி வருகிறார். பேச்சாவடி பகுதியை சேர்ந்தவர் ஹரிசக்தி(20) கல்லூரியில் இன்ஜினியரிங் படித்து... மேலும் பார்க்க

புதுச்சேரி: 1-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை - ஆசிரியரை துவைத்த பெற்றோர்கள்; தனியார் பள்ளி சூறை

புதுச்சேரி – கடலூர் சாலையில் தவளக்குப்பம் பகுதியில் செயல்பட்டு வருகிறது அந்த தனியார் பள்ளி . புதுச்சேரி பா.ஜ.க-வின் விவாசாய அணித் தலைவர் ராமுவுக்கு சொந்தமான இந்தப் பள்ளியில், சுமார் 500-க்கும் மேற்பட்... மேலும் பார்க்க