செய்திகள் :

Koomapatti: ``கூமாபட்டியில் ரூ.10 கோடியிலான பூங்கா'' - விருதுநகர் ஆட்சியர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

post image

தமிழ்நாட்டின் காஷ்மீர் என திடீரென வைரலானது விருதுநகர் மாவட்ட கூமாபட்டி கிராமம். ஆனால் உண்மையில் அந்த கிராமத்தில் ஆறுகள் வறண்டு இருப்பதாகவும், இணையத்தில் பரவுவது பழைய வீடியோவாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. வைரலான வீடியோவில் காட்டப்படும் அந்த அணையில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ அனுமதி இல்லை. சுற்றுலாப்பயணிகள் நம்பி வந்து ஏமாற வேண்டாம் என பொதுப்பணித்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தின் முன்னாள் கலெக்டர் ஜெயசீலன், ``கூமாபட்டி போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புற வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ள‌ இடம். எதிர்காலத்தில் இது‌ கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்!" என அவரின் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

மரு.என்.ஓ. சுகபுத்ரா
மரு.என்.ஓ. சுகபுத்ரா

அதைத் தொடர்ந்து, புதிதாக விருதுநகர் கலெக்டராக பதவியேற்றிருக்கும் மரு.என்.ஓ.சுகபுத்ரா, தன் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில், ``தமிழ்நாடு முதலமைச்சரின், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டம், பிளவுக்கல் பெரியாறு அணையில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் பூங்கா மேம்பாட்டு பணி நடைபெறும் என்ற அறிவிப்பை தொடர்ந்து, அதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து, அரசிடம் நிர்வாக ஒப்புதல் பெறுவதற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசிடமிருந்து அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிதி பெறப்பட்டவுடன் பூங்கா மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படும்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Reliance: ``என் தந்தை என்னிடம் சொன்னதுதான் என் லட்சியம்" - மனம் திறந்த முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் அதன் நிறுவனர்களுக்குப் பிறகும் இருப்பதை உறுதி செய்வதே என் மிகப்பெரிய லட்சியம் என முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: தாய் இல்லாத கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்கும் நாய்.. நெகிழவைக்கும் சம்பவம்!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜ் நகரை சேர்ந்தவர் பச்சையம்மாள். இவர் பசுமாடு ஒன்று வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றெடுத்த பின்னர் பசு மாடு இறந்த... மேலும் பார்க்க

``விருதுநகரே விடைபெறுகிறேன்!'' - ஆட்சியர் ஜெயசீலன் எழுதிய உருக்கமான கடிதம்!

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய முனைவர். வீ.ப.ஜெயசீலன் பணியிட மாற்றமாக பெருநகர சென்னை மாநகராட்சியின் சுகாதார இணை ஆணையராக செல்கிறார். கடந்த இரண்டரை ஆண்டுகளாக தான் பணியாற்றிய விருதுநகர் மாவட்ட மக... மேலும் பார்க்க

``Urine Eye Wash'' - வைரலாகும் பெண்ணின் பதிவு; ``கொடூரமானது'' - எச்சரிக்கும் மருத்துவர்

புனேயை சேர்ந்த நுபுர் என்ற பெண் தினமும் காலையில் தனது சிறுநீரில் கண்களை கழுவுவதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டது வைரலாகி வருகிறது.அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்க பதிவில் `Urine Eye Wash — Nature’s Own Med... மேலும் பார்க்க

Spain: `உலகிலேயே பெரிய உதடு' - உலக சாதனைக்காக இளம்பெண் செய்த வேலை.. செலவு எவ்வளவு தெரியுமா?

ஸ்பெயினின் மஜோர்காவைச் சேர்ந்த வியன்னா என்ற பெண் உதட்டு சிகிச்சைக்காக £37,000 (கிட்டதட்ட இந்திய மதிப்பில் 39 லட்சம் ரூபாய்) செலவழித்துள்ளார். உலகிலேயே மிகப்பெரிய உதட்டை பெறவேண்டும், என்பதற்காக இந்த அற... மேலும் பார்க்க

``நீ இல்லையெனில் சாத்தியமில்லை..'' - விண்வெளி பயணத்திற்கு முன் மனைவிக்கு நன்றி சொன்ன சுபான்ஷு சுக்லா

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவுடன் இணைந்து 2025-ல் `ஆக்ஸியம் ஸ்பேஸ் ஆக்ஸ்- 4' என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அதன்படி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீ... மேலும் பார்க்க