செய்திகள் :

MiG-21 Retirement: முடிவுக்கு வந்த 62 வருட சேவை: மிக்-21 விமானங்களுக்கு பிரியாவிடை கொடுத்த IAF

post image

இந்திய விமானப்படையில் முக்கிய, பல போர்களின் நாயகனாக விளங்கிய MiG-21 ரக போர் விமானங்கள், 62 ஆண்டு கால சேவைக்குப் பிறகு இன்று ஓய்வு பெற்றன. நாட்டின் முதல் சூப்பர்சோனிக் போர் விமானம் என்ற பெருமைக்குரிய இந்த விமானங்களுக்கு, சண்டிகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் பிரமாண்டமான பிரியாவிடை விழா நடைபெறுகிறது.

இந்த நிகழ்வில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தலைமை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங், ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.

இந்த விழாவின் முக்கிய அம்சமாக விமானங்கள் இணைந்து கண்கவர் விமான அணிவகுப்பு நடத்தப்பட்டது.

2019 வான்வழித் தாக்குதலை நினைவுகூரும் வகையில், MiG-21 மற்றும் ஜாகுவார் விமானங்களுக்கு இடையே ஒரு மாதிரி வான்வழி சண்டையும் நடத்தப்பட்டது.

தரையிறங்கிய விமானங்களுக்கு பீரங்கிகள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடித்து (Water Cannon Salute) மரியாதை செலுத்தப்பட்டது. இறுதியாக, விமானப்படை தலைமை தளபதி, MiG-21 விமானங்களின் 'ஃபார்ம் 700' பதிவுப் புத்தகத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் ஒப்படைத்து, ஓய்வை குறிப்பிட்டிருக்கிறார்.

1963-ல் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டMiG-21 விமானங்கள், இதுவரை 1,200-க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்கியுள்ளது.

1965 மற்றும் 1971-ல் நடந்த இந்திய-பாகிஸ்தான் போர்களிலும், 1999 கார்கில் போரிலும் MiG-21முக்கிய பங்கு வகுத்திருக்கிறது. குறிப்பாக 2019-ல் பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியிருக்கிறது.

பல தசாப்தங்களாக இந்திய விமானப்படையின் பலமாக இருந்த இந்த விமான ரகங்கள், அதன் இறுதிக்காலத்தில் அடிக்கடி நடந்த விபத்துக்களால் Flying Coffin என்ற மோசமான பெயரையும் பெற்றது.

மே 2023 ராஜஸ்தானில் நடந்த விபத்தைத் தொடர்ந்து இந்த ரக விமானங்கள் அனைத்தும் தற்காலிகமாகத் தரை இறக்கப்பட்டன. MiG-21 விமானங்களின் ஓய்வால், இந்திய விமானப்படையில் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை 42-ல் இருந்து 29 ஆகக் குறைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Sugar Dating: பணக்கார வயதானவர்கள் மீது தோழமை கொள்ளும் இளம் வயதினர் - இந்த போக்கு ட்ரெண்டாவது ஏன்?

தற்போது இருக்கும் நவீன காலத்தில் இளைய தலைமுறையினர், உறவுகளை வளர்க்க சமூக வலைதளங்களை நாடிச் செல்கின்றனர். டேட்டிங் முதல் திருமணம் செய்வது வரை ஆன்லைனிலேயே பார்க்கின்றனர். இப்படி ட்ரெண்ட் மாறிக்கொண்டே இர... மேலும் பார்க்க

USA: 30 ஆண்டுகள் வசித்த 73 வயது மூதாட்டியை கைவிலங்கிட்டு இந்தியாவுக்கு நாடு கடத்திய ட்ரம்ப் அரசு

அமெரிக்காவில் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு உரிய ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களை கைது செய்து அவர்களின் சொந்த நாட்டிற்கு நாடு கடத்துவது அதிகரித்து இருக்கிறது. அவர்களை ம... மேலும் பார்க்க

சஞ்சய் கபூர் சொத்து விவரம்: ``கரிஷ்மா கபூர் பிள்ளைகள் கையெழுத்துப் போட்டால் தான்'' -பிரியா சச்சிதேவ்

ரூ.30 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துபாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் திடீரென லண்டனில் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஜூன் மாதம் இறந்ததால், அவர் விட்டுச்சென்ற சொத்துக்கு கரிஷ்மா கபூர... மேலும் பார்க்க

குழந்தை பெற்றால் போனஸ், இலவச பார்ட்டி; சூப்பர் ஆஃபர் வழங்கும் போலந்து ஹோட்டல் - என்ன காரணம்?

போலந்து நாட்டில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஒரு ஹோட்டல் குழுமம் தனது ஹோட்டலில் தங்கும் தம்பதியினர் குழந்தை பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு பணப்பரிசும், இலவச பார்ட்டிகளும் ... மேலும் பார்க்க

விவசாய நிலங்களில் பயிர் சேதம்; ஆதாரம் கேட்டதால் காட்டுப்பன்றியுடன் ஆட்சியரை சந்திக்க வந்த விவசாயிகள்

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகாவிற்குட்பட்ட அழகாபுரி கிராமத்தில் இருந்து மெட்டல்பட்டி செல்லும் சாலையின் இருபுறமும் தோட்டப் பாசன நிலங்களில் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இங... மேலும் பார்க்க

மபி: "உன் நாய் என் பூனையைக் கடிக்குது" - ஒன்று சேர்த்து வைத்த பிராணிகளால் விவாகரத்து கோரும் தம்பதி

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் சேர்ந்த சுக்ராம் என்பவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வளர்ப்பு பிராணிகள் மீது மிகுந்த அன்பு வை... மேலும் பார்க்க