செய்திகள் :

Mk Stalin: ``மத்திய அரசு தரலைன்னா என்ன? நான் தரேன்.." - முதல்வரை நெகிழவைத்த சிறுமி!

post image

தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலினின் கல்விக் கொள்கைக்கு ஆதரவாக கடலூரைச் சேர்ந்த நன்முகை என்ற சிறுமி தனது சேமிப்பில் இருந்து ரூபாய் 10000 நன்கொடையாக வழங்கியுள்ள செயல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கல்விக் கொள்கை (NEP) தொடர்பாக உரையாற்றினார். மும்மொழிக்கொளையை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு ஏற்றால் மட்டுமே மத்திய அரசு நிதி வழங்கும் என அறிவித்துள்ளதாக அவர் கூறினார்.

மு.க.ஸ்டாலின்

அத்துடன் தமிழக அரசு தன் நிலைப்பாட்டை மாற்றாது, மாணவர்கள் பாதிப்பு ஏற்படாமல் கல்விக்கு தேவையான நிதியை வழங்கும் என உறுதியளித்தார்.

முதல்வரின் உரை மனதில் தாக்கம் ஏற்படுத்தியதால் கடலூரைச் சேர்ந்த நன்முகை என்ற LKG மாணவி, ரூ.10,000 நன்கொடையாக வழங்கி முதல்வரின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த செயல் சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நன்முகையின் வீடியோவில் சிறுமி, "நம் தமிழ் மொழியை காக்க நீங்கள் பாடுபடுவீர்கள் என்று கூறினீர்கள், என் பாலு தாத்தாவும் , சாந்தி பாட்டியும் தமிழ் ஆசிரியர்கள். அதனால் மத்திய அரசு தரவேண்டிய பணத்தை நான் உங்களுக்கு எனது பங்களிப்பாக ரூபாய் 10,000 அனுப்பி வைக்கிறேன்" என மழலை மொழியில் பேசியுள்ளார்.

MK Stalin

நன்முகையின் செயல் குறித்து இன்று திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் மு.க.ஸ்டாலின். அவர், "கடலூரைச் சேர்ந்த சிறுமி நன்முகை, “ஒன்றிய அரசு நிதி தரலைன்னா என்ன, நான் தருகிறேன்" என்று 10 ஆயிரம் ரூபாயைக் காசோலையாக அனுப்பி நெகிழ வைத்திருக்கிறார். இதுதான் தமிழ்நாட்டு மக்களின் உணர்வு. நெகிழ வைத்த நன்மகள் நன்முகையின் உணர்வுதான், நம் தமிழ்நாட்டின் உணர்வு! ‘இது இன்பத் தமிழ்நாடு. இங்கே ஆதிக்கத்திற்கு இடமில்லை ஓடு!' என்று துணிந்து சொல்லும் வலிமை நமக்கு உண்டு" என எழுதியுள்ளார்.

NEP: ``ஏன் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்..?'' - அமைச்சர் பொன்முடி விளக்கம்

அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் 1969 முதல் 2000 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார். அப்போது, ``எல்லோரும் படி... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: `தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி' - எதிர்ப்பு கிளம்புவது ஏன்?

`அனைத்துக் கட்சிக் கூட்டம்' - முதல்வர் அறிவிப்புதொகுதி மறுசீரமைப்பு, `ஒரே நாடு, ஒரே தேர்தல்' நடைமுறையை கொண்டுவர பா.ஜ.க தீவிரம் காட்டி வருகிறது. இதனால், 'மாநில அரசுகளின் உரிமை பறிபோகும்' என, எதிர்க்கட்... மேலும் பார்க்க

`இந்திக்கு அல்ல இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில் ஒருபோதும் இடம் இருக்காது' - திருமாவளவன் பேசியதென்ன?

இந்தி திணிப்பு குறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.இந்தி திணிப்பு என்பது ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை. இந்தியாவை 'ஒரே நாடு', 'ஒரே மொழி' என்கிற அடிப்... மேலும் பார்க்க

Stalin: ``இந்தியை படிக்காதே என்று கூறவில்லை, திணிக்காதே என்றுதான் கூறுகிறோம்'' - ஸ்டாலின்

தமிழை அழிக்க நினைக்கும் ஆதிக்க மொழி எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்கமாட்டோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.அந்தக் கடிதத்தில், " ஆம்.. இது ஒரு தொடர்ச்சியான போரா... மேலும் பார்க்க

Doctor Vikatan: அப்பாவின் பல வருட சிகரெட் பழக்கம், குடும்பத்தாரின் பயம்... மீட்க முடியுமா?

Doctor Vikatan: என்அம்மாவும் அப்பாவும் வெளியூரில்தனியே வசிக்கிறார்கள். அப்பாவுக்கு 70 வயதாகிறது. பல வருடங்களாக அவருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் தொடர்கிறது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் அதைநிறுத்த மற... மேலும் பார்க்க