செய்திகள் :

New Delhi: 'கும்பமேளா கூட்டநெரிசல்; புதுடெல்லி ரயில் நிலையத்தில் பறிபோன 18 உயிர்கள்'- என்ன நடந்தது?

post image
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா நிகழ்வுக்கு செல்ல வேண்டி புதுடெல்லி இரயில் நிலையத்தில் கூடிய கூட்டத்தால் ஏற்பட்ட நெரிசலில் 18 பேர் உயிரிழந்த வேதனையான சம்பவம் நடந்திருக்கிறது.

கும்பமேளாவில் கலந்துகொள்ள இந்தியா முழுவதுமிருந்து பல தரப்பட்ட மக்கள் உத்தரபிரதேசம் நோக்கி சென்று வருகின்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி ஏற்கனவே பல பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், நேற்று இரவு புதுடெல்லி இரயில் நிலையத்திலும் கூட்ட நெரிசலால் கொடூரம் நிகழ்ந்திருக்கிறது.

நேற்று இரவு 10 மணியளவில் புதுடெல்லி இரயில் நிலையத்திலிருந்து கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜூக்கு செல்லும் இரயிலை பிடிக்க எக்கச்சக்கமான மக்கள் இரயில் நிலையத்துக்கு வந்திருக்கின்றனர். இந்த இரயில் 14 வது ப்ளாட்பார்மில் வரவிருந்திருக்கிறது. அதேமாதிரி, 12 மற்றும் 13 வது ப்ளாட்பார்ம்களில் வர வேண்டிய ஸ்வாதந்ரத்தா எக்ஸ்பிரஸூம் புபனேஷ்வர் ராஜதானி ரயிலின் வருகையும் தாமதமாகியிருக்கிறது.

பிரயாக்ராஜ் ரயிலை பிடிக்கக் கூடிய கூட்டத்தோடு அந்த இரயில்களுக்கு கூடிய கூட்டமும் இணையவே நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதில் 14 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் நிறைய பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காகவும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

'புதுடெல்லி இரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை எண்ணி மனமுடைந்திருக்கிறேன். அந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நோக்கியே என்னுடைய எண்ணமெல்லாம் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். கூட்டநெரிசலால் பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்குமான உதவிகளையும் அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.' என பிரதமர் மோடி பதிவை வெளியிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``காளியம்மாள் கட்சியிலிருந்து வெளியேற முழு சுதந்திரம் இருக்கிறது" - சீமான் ஓப்பன் டாக்

தமிழ்நாட்டில் இன்று நாம் தமிழர் கட்சி என்று சொன்னால் சீமானுக்கு அடுத்தபடியாக மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படும் முகங்களில், கட்சியின் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முக்கியமானவர். இவ்வாறிர... மேலும் பார்க்க

"2026 சட்டமன்றத் தேர்தல் சிரமமாக இருக்கும்..." - திமுகவுக்கு பெ.சண்முகம் கொடுக்கும் மெசேஜ் என்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோவை ராஜவீதி பகுதியில் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பேசுகையில், “மத்திய அமைச்ச... மேலும் பார்க்க

NEP: "நீங்கள் வந்து வளர்ப்பீர்கள் எனத் தமிழ் கையேந்தி நிற்கவில்லை" - மத்திய அரசைச் சாடிய முதல்வர்

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் கள ஆய்வுப் பணிக்காக நேற்றும், இன்றும் கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்திருக்கிறார். கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் ரூ.1,476 கோடி... மேலும் பார்க்க

FBI-ன் இயக்குநர்; இந்திய வம்சாவளி; பகவத் கீதை வைத்து பதவிப் பிரமாணம் - யார் இந்த Kash Patel?

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான FBI-யின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை (kash-patel) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நியமனம் செய்திருக்கிறார்.அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவ... மேலும் பார்க்க

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசல் விவகாரம்: "வீடியோக்களை நீக்குக" - எக்ஸ் தளத்துக்கு ரயில்வே நோட்டீஸ்

புது டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடி தொடர்பாக வெளியான 285 வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சகம் கோரியுள்ளது. எக்ஸ் தளத்தில் இக்கோரிக்கை வைத்து... மேலும் பார்க்க

"என்னைச் சாதாரணமாக நினைக்காதீர்; உத்தவ் அரசையே கவிழ்த்தவன்..." - முற்றும் ஷிண்டே - பட்னாவிஸ் மோதல்!

மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்வர் பதவியிலிருந்து விலக ஏக்நாத் ஷிண்டே மறுத்தார். ஆனால் பா.ஜ.க அவரைக் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியிலிருந்து விலகச் செய்த... மேலும் பார்க்க