செய்திகள் :

Odisha: ``தரமற்ற உணவு, அவமரியாதை..'' - ஆட்சியரிடம் புகாரளிக்க 20 கி.மீ நடந்து சென்ற 116 மாணவர்கள்!

post image
அரசு பள்ளியின் 116 மாணவர்கள் ஆட்சியரிடம் புகாரளிக்க 20 கி.மீ நடந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இருக்கிறது பாசிபிதா அரசு உயர்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில், அரசு விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் ஆசிரியர்களால் இழிவாக நடத்தப்படுவதாகவும், தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், மாணவர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்க 8, 9-ம் வகுப்பு படிக்கும் 116 மாணவர்கள் முடிவு செய்திருக்கின்றனர்.

ஆட்சியர் அலுவலகம்

அதற்காக அனைத்து மாணவர்களும் நள்ளிரவு 12 மணிக்கு தங்கள் கிராமத்திலிருந்து புறப்பட்டு, சுமார் 20 கி.மீ தூரம் நடந்து பரிபாடாவில் உள்ள ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு, துணை ஆட்சியர், மாவட்ட நல அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் (DRDA) திட்ட இயக்குநர் (PD) ஆகியோரைச் சந்தித்து, தங்கள் பிரச்னைகளை முறையிட்டனர். வீடியோகால் மூலம் ஆட்சியரிடமும் பேசினர். அதைத் தொடர்ந்து, விரையில் அவர்களின் பிரச்னையை சரி செய்வதாக ஆட்சியர் வாக்களித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் விடுதிக்கு திரும்பினர். மாணவர்கள் தங்கள் விடுதிக்குத் திரும்பிச் செல்ல அதிகாரிகள் பேருந்து ஏற்பாடு செய்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

Preity Zinta: "BJPயிடம் என் சமூக வலைத்தளக் கணக்கைக் கொடுத்து பணம் வாங்கினேனா?" - பிரீத்தி ஜிந்தா

பிரபல பாலிவுட் நடிகையாகவும், ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் உரிமையாளருமாக இருப்பவர் நடிகை பிரீத்தி ஜிந்தா.'எக்ஸ்' வலைத்தளத்தில் தனக்கென 6 மில்லியம் ஃபாலோவர்ஸை வைத்திருக்கிறார் பிரீத்தி ஜிந்தா. சமீபத... மேலும் பார்க்க

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர், பகத் சிங் புகைப்படங்கள் அகற்றமா? - ரேகா குப்தா விளக்கம்!

டெல்லி முதல்வர் அலுவலகத்திலிருந்து பகத் சிங் மற்றும் அம்பேத்கரின் புகைப்படங்களை அகற்றியதாக பாஜக மீது எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம்சாட்டியிருந்த நிலையில், இக்குற்றச்சாட்டை மறுத்து, விளக்... மேலும் பார்க்க

America: `இப்படி நடக்கும்னு நினைக்கல' - ட்ரம்ப் உத்தரவால் பாஸ்போர்ட்டில் ஆணாக மாற்றப்பட்ட திருநங்கை!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆண், பெண் பாலினங்களைத் தவிர, பிற பாலினங்களை ஏற்க மறுப்பவர், அங்கீகரிக்காதவர் என்பது அனைவரும் அறிந்ததே.அதிபராகப் பதவியேற்றதும் அவர் அடுக்கடுக்காக கையெழுத்திட்ட உத்தரவுகளில், 'இன... மேலும் பார்க்க

"திமுக ஆட்சியில் விளம்பர மாடல் மட்டும்தான் நடைபெறுகிறது..." - சி.வி.சண்முகம் காட்டம்

திமுக ஆட்சியில் விளம்பர மாடல் மட்டும் தான் நடைபெறுகிறது வேறொன்றும் நடைபெறவில்லை என்றும், மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கிவிட்டு ஒருபக்கம் டாஸ்மாக்கிலும் மறுபக்கம் சினிமா தியேட்டர்களிலும் வசூலிக்கின்றன... மேலும் பார்க்க

Railway: முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதா? - ரயில்வே விளக்கம்!

கும்பமேளா நிகழ்வைத் தொடர்ந்து, டெல்லி ரயில்வே நிலையத்தில் ஏற்பட்ட நெருக்கடியில், 18 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்திய ரயில்வே துறை மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதற்கடுத்து, தெற்கு ரயில்வேயில் 13... மேலும் பார்க்க

பிரதமரின் முதன்மைச் செயலாளராக RBI முன்னாள் கவர்னர் நியமனம்! - யாரிந்த சக்திகாந்த தாஸ்?

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது. பிரதமரின் பதவ... மேலும் பார்க்க