செய்திகள் :

One Day DC: 'என் வாழ்வில் மறக்கமாட்டேன்'- ஒரு நாள் துணை ஆணையராகப் பதவி வகித்த 10-ம் வகுப்பு மாணவி

post image

ஒரு நாள் முதல்வர் பற்றிய கதைகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், 10-ம் வகுப்பு மாணவி ஒரு நாள் துணை ஆணையராக பதவி வகித்த கதையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

அப்படியான ஒரு நிகழ்வு ஹிமாச்சலப் பிரதேச மாநிலத்தின் மண்டி மாவட்டத்தில் நடந்திருக்கிறது.

Apoorva Devgan - Mandi District Commissioner
Apoorva Devgan - Mandi District Commissioner

ஹிமாசலப் பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் உள்ள டூன் என்ற கிராமத்தில் வசித்து வருகிறார் மாணவி அன்வி. இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவி அன்வி, அதிக மதிப்பெண்கள் பெற்று ஹிமாசலப் பிரதேச மாநிலத்தில் நான்காம் இடமும், மண்டி மாவட்டத்தில் முதலாம் இடமும் பிடித்திருக்கிறார்.

அன்வியின் இந்தச் சாதனையை ஊக்குவிக்கும் வகையில், மண்டி மாவட்ட நிர்வாகம் அவருக்கு ஒரு நாள் மண்டி மாவட்டத்தின் துணை ஆணையராக பதவி வகிக்கும் பொறுப்பை வழங்கியிருக்கிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாள் துணை ஆணையராகப் பதவி வகித்த அன்விக்கு, பல பொறுப்புகள் குறித்து அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

மண்டி மாவட்டத்தின் ஆட்சியரான அபூர்வா தேவ்கன், அன்வியை வரவேற்று, பல்வேறு நிர்வாகச் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். ஒரு நாள் துணை ஆட்சியராகப் பதவி வகித்த அன்வி, முதல் பணியாக நிலநடுக்கப் பயிற்சி ஒத்திகையை ஆய்வு செய்தார்.

அங்கு அவர் அதிகாரிகளுடன் உரையாடி, பேரிடர் மேலாண்மைத் தயார்நிலை குறித்து மதிப்பாய்வு செய்திருக்கிறார். பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் பல்வேறு பிரிவுகளைப் பார்வையிட்டு, அவற்றின் பங்குகள் மற்றும் செயல்பாடுகளைக் கவனித்திருக்கிறார்.

மேலும், பொது மக்களின் குறைகேள் விசாரணை அமர்வில் பங்கேற்று, புகார்களைக் கேட்டுத், தொடர்புடைய துறைகளுக்கு அவற்றைத் தீர்க்க உத்தரவிட்டிருக்கிறார்.

Anvi - One day DC
Anvi - One day DC

ஒரு நாள் துணை ஆணையராகப் பதவி வகித்த அன்வி, "இந்த நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். இன்று நான் ஒரு மாவட்ட ஆட்சியரின் பணிகள், அவரது பொறுப்புகள் மற்றும் நிர்வாகச் செயல்முறைகளை நெருக்கமாக அறிந்துகொண்டேன்," எனக் கூறியிருக்கிறார்.

மண்டி மாவட்டத்தில் பின்பற்றப்படும் இந்த ‘ஒரு நாள் துணை ஆட்சியர்’ முயற்சி குறித்து, அம்மாவட்டத்தின் ஆட்சியரான அபூர்வா தேவ்கன், "இந்த முயற்சி மாணவர்களை ஊக்குவிப்பதற்கும், அவர்களிடம் தலைமைத்துவத் திறன்கள், தன்னம்பிக்கை மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதற்கும் மண்டி நிர்வாகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்," எனத் தெரிவித்திருக்கிறார்.

Amit Shah: `திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது என்கிறார் ஸ்டாலின்; உண்மைதான்! ஆனால்..' - அமித் ஷா

மதுரை ஒத்தக்கடையில் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டம்உள்துறை அமைச்சர் அமித் ஷா மதுரைக்கு வருகை தந்திருக்கிறார். மதுரை வந்திருக்கும் அவர் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதைத்... மேலும் பார்க்க

Bengaluru Stampede: ``மகனுக்காக நான் வாங்கிய இடத்திலேயே அவனது கல்லறை..'' - தந்தையின் சோகக் குரல்

ஐபிஎல்-லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தனது முதல் கோப்பையை வென்றதற்கு,கடந்த ஜூன் மாலை ஆர்.சி.பி வீரர்களை நேரில் அழைத்து சிறப்பிக்க அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டி... மேலும் பார்க்க

Manipur: மணிப்பூரில் மீண்டும் வெடிக்கும் போராட்டங்கள்; இணைய சேவைகள் முடக்கம் - என்ன நடக்கிறது?

இந்திய வரலாற்றின் கருப்பு பக்கங்களில் சிகப்பு எழுத்துக்களால் எழுதப்பட வேண்டிய வரலாறு மணிப்பூருடையது. மே 3, 2023-ம் ஆண்டு இரு சமூக மக்களுக்கிடையே கலவரம் தொடங்கி இன்றுடன் சரியாக இரண்டு ஆண்டுகள் முடிந்து... மேலும் பார்க்க

``ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அபத்தமானது; அடிப்படை ஆதாரமற்றது'' - தேர்தல் ஆணையம் பதில்

மகாராஷ்டிராவில் கடந்த 2024-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி அபார வெற்றியைப் பெற்றது. இந்தத் தேர்தலில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்ததாக பாஜக மீது காங்கிரஸ் தலைவர... மேலும் பார்க்க

உப்பை உண்டு, புனித நூல்கள் மீது சத்திய பிரமாணம்! - எல்லைகளைப் பாதுகாக்க கிளம்பும் 500 அக்னி வீரர்கள்

நூற்றாண்டு பழைமை வாய்ந்த ராணுவ பயிற்சி முகாம்களில் ஒன்றாக விளங்கி வருகிறது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து மெட்ராஸ் ரெஜிமென்ட் ... மேலும் பார்க்க

Chenab Bridge: ஈஃபிள் டவரை விட உயரம்; 359 அடி உயரத்தில்... காஷ்மீரில் இன்று திறப்பு -| Top Facts

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பிறகு, இன்று பிரதமர் மோடி ஜம்மு & காஷ்மீர் செல்கிறார். எதற்காக? ஜம்மு & காஷ்மீரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் வளைவு பாலம் 'செனாப் பாலம்'... மேலும் பார்க்க