செய்திகள் :

Pahalgam Attack: ஜம்மு காஷ்மீரை விட்டு அவசரமாக வெளியேறும் சுற்றுலா பயணிகள்; உதவும் உமர் அப்துல்லா

post image

பகல்காம் தாக்குதலுக்கு (Pahalgam Attack) பின், ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற சுற்றுலா பயணிகள் வேக வேகமாக சொந்த மாநிலங்கள் அல்லது நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் வகையில் சில போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுக்குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில்...

"நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர் எங்களது விருந்தினர்கள் பகல்காமில் இருந்து வெளியேறுவதை பார்க்க மனவேதனையாக இருக்கிறது. ஆனால், அதே நேரத்தில், 'மக்கள் ஏன் வெளியேற நினைக்கிறார்கள்?' என்பதை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம்.

ராணுவ பாதுகாப்பில் பகல்காம் பகுதி
ராணுவ பாதுகாப்பில் பகல்காம் பகுதி

கூடுதல் விமானங்களை இயக்க டி.ஜி.சி.ஏ மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் செயல்பட்டு வரும் நிலையில், ஶ்ரீநகர் மற்றும் ஜம்முவிற்கு இடையேயான தேசிய நெடுஞ்சாலை 44 ஒரே திசையிலான போக்குவரத்துக்காக மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா வந்துள்ள வாகனங்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில் ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையே போக்குவரத்தை எளிதாக்க நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்.

சில இடங்களில் சாலைகள் இன்னும் நிலையற்றத்தன்மை உடன் இருக்கின்றன. இவைகள் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் ஒழங்கமைப்பட்ட முறையில் சரிசெய்யப்பட வேண்டும். மேலும், இந்தப் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் அனைத்து வாகனங்களையும் அகற்ற கடுமையாக உழைத்து வருகிறோம்.

தற்போது வாகனங்களை எந்த கட்டுபாடுகளும் இன்றி இயக்க அனுமதிக்க முடியாது. அதனால், அனைவரும் எங்களுடன் ஒத்துழைப்புடன் இருப்பார்கள் என்று நம்புகிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Pahalgam Attack: ``உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்!'' -முதல்வர் உமர் அப்துல்லா அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காம் மாநிலத்தில் நேற்று பயங்கர தீவிரவாத தாக்குதல் (Pahalgam Attack) நடந்துள்ளது. இதுவரை வெளியாகி உள்ள தகவலின் படி, இந்தத் தாக்குதலில் கிட்டதட்ட 28 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த... மேலும் பார்க்க

Pahalgam Attack: ``எங்களுக்கு தொடர்பில்லை, இந்திய அரசுதான் காரணம்..'' - பாகிஸ்தான் அமைச்சர்

ஜம்மு காஷ்மீரில் உள்ள பகல்காமில் (Pahalgam Attack) நடந்த தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தானும் இருக்கிறது என்று பரவலாக கூறப்படும் இந்த வேளையில், 'எங்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை' என்று பாக... மேலும் பார்க்க

Pahalgam Attack: பாகிஸ்தான் வான் வழி விமான பயணத்தை தவிர்த்த மோடி.. காரணம் என்ன?

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பின், சவுதி அரேபியாவின் அரசு பயணத்திலிருந்து பாதியிலேயே திரும்பிவிட்டார் பிரதமர் மோடி. இன்று காலை அவர் இந்தியா திரும்பியதும் புது டெல்லி விமான ... மேலும் பார்க்க

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்; பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நேரில் ஆறுதல் சொன்ன அமித்ஷா

ஜம்மு காஷ்மீரின் பகல்ஹாமல் நேற்று பயங்கர தாக்குதல் நடந்துள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு இணையான மிகப்பெரிய தாக்குதல் இது. இதுவரை வெளியான தகவலின் படி, இந்தத் தாக்குதலில் 29 பேர் பலியாகி உள்ளனர்.நேற்று, இ... மேலும் பார்க்க

காஷ்மீர் தாக்குதல்: `இந்தியா உடன் துணை நிற்கிறோம்' - இந்தியா உடன் கைக்கோர்க்கும் உலக நாடுகள்

நேற்று தெற்கு காஷ்மீரில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் கிட்டதட்ட 28 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உலக நாடுகள் இந்தியா உடன் கைக்கோர... மேலும் பார்க்க

Doctor Vikatan: கரும்பு ஜூஸ் குடித்தால் ஜலதோஷம் பிடிக்குமா.. நீரிழிவு உள்ளோர் குடிக்கலாமா?

Doctor Vikatan:கரும்பு ஜூஸ் உடலுக்கு குளிர்ச்சியைத் தருமா, எல்லோரும் குடிக்கலாமா, இதைக் குடித்தால் சளி பிடித்துக்கொள்ளுமா?, நீரிழிவு உள்ளவர்களும், சைனஸ் பிரச்னை உள்ளவர்களும் எடுத்துக்கொள்ளலாமா?பதில் ச... மேலும் பார்க்க