Pope Francis: போப் இறுதிச் சடங்கு; உலகத் தலைவர்கள் பங்கேற்பு, குவியும் லட்சக்கணக்கான மக்கள்
கத்தோலிக்கத் திருச்சபையின் 266-வது போப்பாகவும், வாட்டிக்கன் நகரத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பிரான்சிஸ்(88) உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி மரணமடைந்தார். போப் அவர்களின் உடல் ரோம் நகரின் வாடிக்கனில் அமைந்துள்ள செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா கத்தோலிக்க தேவாலயத்தின் முன் வைக்கப்பட்டிருக்கிறது.

இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 26) நடைபெறவிருக்கிறது. அவரது உடல் வாடிக்கனில் இருக்கும் அவரது காசா சாண்டா மார்டா, மாளிகையில் அடக்கம் செய்யப்படவிருக்கிறது.
செயின்ட் பீட்டர்ஸ் பசிலிக்கா கத்தோலிக்க தேவாலயத்தில், புதன் கிழமையிலிருந்து சனிக்கிழமை வரை மூன்று நாள்கள் போப் பிரான்சிஸ் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக 25 லட்சம் பொதுமக்கள் வரை வாடிக்கனில் குவிய நேரிடலாம் என அரசின் சார்பில் எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பலமாக செய்யப்பட்டு வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, பிரேசில், லெபனான், அர்ஜென்டினா உள்ளிட்ட பல நாட்டின் முக்கியத் தலைவர்கள், அதிபர்கள், பாதிரியார்கள், கார்டினல்கள் இந்த அஞ்சலி மற்றும் இறுதிச் சடங்கு நிகழ்வில் கலந்துகொள்கின்றனர். இதனால் வாடிக்கன் நகரம் முழுக்க உயர் மட்டப் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
