கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
Preity Zinta: "BJPயிடம் என் சமூக வலைத்தளக் கணக்கைக் கொடுத்து பணம் வாங்கினேனா?" - பிரீத்தி ஜிந்தா
பிரபல பாலிவுட் நடிகையாகவும், ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியின் உரிமையாளருமாக இருப்பவர் நடிகை பிரீத்தி ஜிந்தா.
'எக்ஸ்' வலைத்தளத்தில் தனக்கென 6 மில்லியம் ஃபாலோவர்ஸை வைத்திருக்கிறார் பிரீத்தி ஜிந்தா. சமீபத்தில் கேரள காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைத்தள பக்கத்தில், நடிகை பிரீத்தி ஜிந்தாவைக் குறிப்பிட்டு, "அவர் தனது சமூக ஊடகக் கணக்குகளைப் பா.ஜ.க-வுக்குக் கொடுத்து, தனது 8 கோடி ரூபாய்க் கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறார். இதனால் கடந்த வாரம் அந்த வங்கி சரிவைச் சந்தித்துள்ளது. அந்த வங்கியில் பணம் போட்டிருப்பவர்கள் தங்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு தெருக்களில் இறங்கியுள்ளனர்" என்று பதிவிடப்பட்டுள்ளது. அது தொடர்பான செய்திக் காணொலிகளும் அந்தப் பதிவில் பகிரப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து மெளனம் கலைத்து மனம் திறந்திருக்கும் நடிகை பிரீத்தி ஜிந்தா, "என் சமூக வலைத்தளக் கணக்கை நான் தான் கையாளுகிறேன். வதந்திகளை, போலியான செய்திகளைப் பரப்புகிறார்கள். நான் எந்தக் கடனும் வாங்கவில்லை. என் கடன் தள்ளுபடி செய்யப்படவுமில்லை.
இதுபோன்ற வதந்திகளை அரசியல் கட்சியின் அதிகாரப்பூர்வப் பக்கத்திலிருந்து பரப்பி, அதுவும் என் பெயர், புகைப்படங்களோடு, போலியான செய்தியைப் பகிர்வது அதிர்ச்சியளிக்கிறது. நான் என் கடனை 10 ஆண்டுகளுக்கு முன்பே திருப்பிச் செலுத்திவிட்டேன். இப்போது எனக்கு எந்தக் கடனுமில்லை. இனி இதுபோன்ற வதந்திகள், சந்தேகங்கள் இருக்காது. போதுமான விளக்கம் தந்துவிட்டேன் என்று நினைக்கிறேன்" என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
No I operate my social media accounts my self and shame on you for promoting FAKE NEWS ! No one wrote off anything or any loan for me. I’m shocked that a political party or their representative is promoting fake news & indulging in vile gossip & click baits using my name &… https://t.co/cdnEvqnkYx
— Preity G Zinta (@realpreityzinta) February 25, 2025
மேலும், "சில பத்திரிகையாளர்கள் உண்மையைக் கண்டறியாமலே செய்தியை வெளியிடுவது என்ன மாதிரியான பத்திரிகை ஒழுக்கம்? சந்தேகமிருந்தால், என்னிடமே தொடர்பு கொண்டு, என் தரப்பையும் கேட்டறியலாம். அதைவிட்டுவிட்டு வதந்திகளை, போலியான செய்தியை வெளியிடுவது தவறான விஷயம். இதற்கான நீதி கேட்டு, நான் நீதிமன்றத்திற்கு அலைய வேண்டுமா?
நீங்கள் என்னை மதித்தால், நானும் உங்களை மதிப்பேன். பல ஆண்டுகளாக நான் சம்பாதித்து வைத்திருந்த நற்பெயரைக் கெடுக்கும் வகையில் செயல்படாதீர்கள்" என்று காட்டமாகத் தனது விளக்கத்தைக் கொடுத்திருக்கிறார் நடிகை பிரீத்தி ஜிந்தா.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel