செய்திகள் :

RCB உயர் அதிகாரி உட்பட 4 பேர் கைது; பெங்களூரு காவல்துறை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?

post image

சரிபெங்களூரு சின்னசாமி மைதானத்துக்கு வெளியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 11 பேர் உயிரிழந்த வழக்கில், ஆர்.சி.பி அணி நிர்வாகத்தின் உயர் பொறுப்பில் உள்ள நபர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 ஆண்டுகளுக்குப் பிறகு RCB அணி தொடரை வென்றது, கொண்டாட்ட நிகழ்வுகளில் ஏற்பட்ட துரதிர்ஷ்டமான சம்பவங்களால் கரும்புள்ளியாக மாறியுள்ளது.

RCB Celebration
RCB Celebration

யார் யார் கைது செய்யப்பட்டுள்ளனர்?

காவல்துறையினர் கூறுவதன்படி, RCB -ன் உயர் மார்க்கெட்டிங் அதிகாரி நிகில் சோசலேவும் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு, கெம்பேகவுடா விமான நிலையத்தில் இருந்து மும்பை புறப்பட தயாரானபோது, கைது செய்யப்பட்டுள்ளார்.

சோலே RCB அணியின் அனைத்து விளம்பர நடவடிக்கைகளையும், சமூக வலைத்தள பக்கங்களையும் கையாண்டு வந்துள்ளார். அணி நிர்வாகத்துக்கும் வீரர்களுக்கும் இடையே பாலமாக இருப்பதும் இவர்தானாம்.

இவரைத் தவிர, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் நிறுவனமான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெடைச் சேர்ந்த சுனில் மேத்தியூ (துணைத் தலைவர், ஐபிஎல் நிகழ்வுகளைக் கையாள்பவர்), கிரண், சுமந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு நெரிசல் நிகழ்வு குறித்து, மரணம் விளைவிக்கும் குற்றம் (கொலைக்கு சமமானதல்ல) பாரதிய நியாய சன்ஹீதாவின் பல பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

KSCA நிர்வாகிகள் தலைமறைவு

நேற்று (05.06.2025) கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, ஆர்.சி.பி, கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மற்றும் டி.என்.ஏ எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பிரதிநிதிகளை கைது செய்ய உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்படவுள்ளனர். கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் சங்கர் மற்றும் பொருளாளர் ஜெயராம் - தலைமறைவாகியுள்ளனர், அவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன.

முதல்வர் சித்தராமையா, இந்த சம்பவம் தொடர்பாக பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தா மற்றும் பல மூத்த காவல் அதிகாரிகளை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார்

பெங்களூரு பெருநகர பணிக்குழுவின் கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல், மூத்த ஐபிஎஸ் அதிகாரி சீமந்த் குமார் சிங் உடனடி நடவடிக்கையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜக விமர்சனம்

கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று கர்நாடகா முதல்வர் மற்றும் துணை முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டுமென்று எதிர்க்கட்சியான பாஜக வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், பாஜக மரணங்களை வைத்து கேவலமான அரசியல் செய்கிறது என பதிலளித்துள்ளார் சித்தராமையா.

நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் அரசு அதிகாரிகள் முறையான ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டி வருகின்றனர்.

Trump Vs Musk : நட்பில் விரிசல்; 'எலான் மஸ்கிற்கு அடைக்கலம் தர தயார்' - ரஷ்யா கமென்ட்!

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது நல்ல பிணைப்புடன் இருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் , உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க், இப்போதும் எலியும், பூனையுமாக மாறி உள்ளனர். இதையடுத்து ட்ரம்பின் முன... மேலும் பார்க்க

அமித் ஷா மதுரை வருகை: டி.டி.வி தினகரனைச் சந்திக்க மறுப்பா? என்ன சொல்கிறார் தினகரன்?

நாளை நடைபெறும் பாஜக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மாலை மதுரை வருகிறார்.அப்போது கூட்டணிக் கட்சித்தலைவர்கள், சமூகத் தலைவர்கள் அவரைச் சந்திக்க முயன்று வருவதாகச் சொல்லப்... மேலும் பார்க்க

Amit Shah : முக்கிய சந்திப்புகளும், அசைன்மென்ட்டுகளும்! - அமித் ஷாவின் மதுரை விசிட் பின்னணி

தமிழகத்தில் தேர்தல் காலம் தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கான தேர்தல் பணிகளை வேகப்படுத்த தொடங்கியுள்ளனர். பாஜக-வும் தனது தேர்தல் பணிகளை அண்மைக்காலமாக வேகப்படுத்தி உள்ளது. மாநில தலைமையில் மா... மேலும் பார்க்க

'எனக்கு பதவி தான் வேண்டும்; அடம்பிடிக்கும் உதயநிதி' - ஆர்.பி உதயகுமார் பேசியதென்ன?

`திமுகவில் உள்கட்சி பூசல் உருவாகி உள்ளது' என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியிருக்கிறார்.இது குறித்து ஆர்.பி உதயகுமார் வீடியோ பதிவில் பேசியிருப்பதாவது..."மன்னராட்சிக்கு வழிவகுக்க உதய... மேலும் பார்க்க

'I am Alright; சென்னை போகிறேன், அங்கு தான்..!' - குருமூர்த்தி சந்திப்பு குறித்து ராமதாஸ் பேசியதென்ன?

பாமக-வில் தந்தை - மகன் விரிசல் முற்றிய நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 5) காலை பாமக தலைவர் அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க தைலாபுரம் வந்தார். அன்புமணி வந்து சென்றதுமே, ஆடிட்டர் குருமூர்த்த... மேலும் பார்க்க

Delimitation: `கமலாலய மவுத் பீஸ்; டெல்லி பண்ணையார்களின் அடிமை’ - எடப்பாடி மீது அமைச்சர் காட்டம்

எதிர்க்கட்சிகளின் பல்வேறு வலியுறுத்தல்களுக்குப் பிறகு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதாக கடந்த மாதம் அறிவித்தது மத்திய பாஜக அரசு.அதேபோல், 2021-ல் கொரோனாவால் எடுக்க முடியாமல்போன மக்கள்தொகை கணக்கெடுப்பும... மேலும் பார்க்க