செய்திகள் :

RCB vs PBKS Final: ``கோலியால் முடியுமென்றால் ஸ்ரேயஸாலும் முடியும்; ஆனால்..'' - யுவராஜ் தந்தை கணிப்பு

post image

நடப்பு ஐ.பி.எல் சீசனானது, 17 வருடங்களாகக் கோப்பையே வெல்லாத ஒரு புதிய சாம்பியனை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

புதிய கேப்டன் ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்.சி.பி 4-வது முறையாகவும், சாம்பியன் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி 2-வது முறையாகவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கின்றன.

அகமதாபாத் மைதானத்தில் இன்று (ஜூன் 3) இறுதிப்போட்டி நடைபெறவிருக்கிறது.

பஞ்சாப், பெங்களூரு ரசிகர்களைத் தாண்டி மற்ற ரசிகர்களில் ஒரு தரப்பினர் கோலிக்காக ஆர்.சி.பி கோப்பை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி - பெங்களூரு vs பஞ்சாப்
ஐபிஎல் 2025 இறுதிப்போட்டி - பெங்களூரு vs பஞ்சாப்

இன்னொரு தரப்பினர் பிசிசிஐ-யால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் ஸ்ரேயஸுக்காக பஞ்சாப் கோப்பை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங், பஞ்சாப் அணி கோப்பையை வெல்லும் என்றும், ஆனால் கோலியை அவுட்டாக்காவிட்டால் அது கடினம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

தனியார் ஊடகத்திடம் இதுபற்றி பேசிய யோகராஜ் சிங், "விராட் கோலியைப் பஞ்சாப் விக்கெட் எடுக்காவிட்டால் நெருக்கடிக்குள்ளாவார்கள்.

கோலி அவுட்டாகவில்லையென்றால் அவரால் 250, 300 ரன்களைக் கூட சேஸ் செய்ய முடியும். எனவே முதல் 10 ஓவர்களுக்குள் கோலியை அவுட்டாக்கவில்லையென்றால் பஞ்சாப்பின் ஆட்டம் முடிந்துவிடும்.

இருப்பினும், பஞ்சாப் அணி வெல்லும் என்று என் உணர்வுகள் கூறுகின்றன. பஞ்சாப் அணிக்கு ஒரு அற்புதமான கேப்டன் இருக்கிறார்.

யோகராஜ் சிங்
யோகராஜ் சிங்

இந்தப் போட்டியானது பஞ்சாப் அணிக்கும் கோலிக்கும் இடையே நடக்கும் போட்டி. ஆர்.சி.பி-யில் கோலி இருந்தால், பஞ்சாப்பில் ஸ்ரேயஸ் இருக்கிறார். பஞ்சாப் அணி வெற்றி பெற வேண்டும்.

கோலியால் எந்த நிலையிலிருந்தும் ஆர்.சி.பி-யை வெற்றி பெறவைக்க முடியும் என்றால், ஸ்ரேயஸாலும் அதைச் செய்ய முடியும்." என்று கூறினார்.

இறுதிப்போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற தங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.

IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன் கில்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர் திட்டவட்டம்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம்பீர் ஓப்பன் டாக்

ஐ.பி.எல் முடிந்ததும் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடத் திட்டமிடப்பட்டிருந்தது.அதன்படி, இந்திய அணியில் இடம்பிடித்திர... மேலும் பார்க்க

RCB: "கொண்டாட்டத்தை விடவும் வாழ்க்கை முக்கியம்; இனிமேல் அணி வெற்றிபெற்றால்..." - கபில்தேவ் அறிவுரை

ஐபிஎல் வரலாற்றில் ஆர்சிபி அணி முதல்முறையாக ஜூன் 3-ம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் கோப்பையை வென்றது.இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக அவசர அவசரமாக அடுத்தநாளே (ஜூன் 4), சட்டமன்ற வளாகத்தில் அர... மேலும் பார்க்க

"RCB குடும்பத்திற்கு மிகுந்த வலியும் வேதனையும்..." - நிவாரணம் அறிவித்த அணி நிர்வாகம்!

RCB அணி முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றதையடுத்து, பெங்களூருவில் மிகப் பெரிய கொண்டாட்ட நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் பங்கெடுக்க லட்சக்கணக்கில் மக்கள் திரண்டதனால் நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். சுமார... மேலும் பார்க்க

RCB: "மாநிலத்துக்காக விளையாடாத வீரர்களைப் பாராட்ட அரசுக்கு என்ன கடமை?" - நீதிமன்றத்தில் காரசார வாதம்

பெங்களுருவில் நேற்று (ஜூன் 4) ஆர்.சி.பி அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தின்போது சின்னசாமி ஸ்டேடியதுக்கு வெளியே கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத... மேலும் பார்க்க