45 கிலோ தூய தங்கம் சேர்த்துக் கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயில்!
RCB vs PBKS Final: ``கோலியால் முடியுமென்றால் ஸ்ரேயஸாலும் முடியும்; ஆனால்..'' - யுவராஜ் தந்தை கணிப்பு
நடப்பு ஐ.பி.எல் சீசனானது, 17 வருடங்களாகக் கோப்பையே வெல்லாத ஒரு புதிய சாம்பியனை அறிமுகப்படுத்தவிருக்கிறது.
புதிய கேப்டன் ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்.சி.பி 4-வது முறையாகவும், சாம்பியன் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி 2-வது முறையாகவும் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கின்றன.
அகமதாபாத் மைதானத்தில் இன்று (ஜூன் 3) இறுதிப்போட்டி நடைபெறவிருக்கிறது.
பஞ்சாப், பெங்களூரு ரசிகர்களைத் தாண்டி மற்ற ரசிகர்களில் ஒரு தரப்பினர் கோலிக்காக ஆர்.சி.பி கோப்பை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இன்னொரு தரப்பினர் பிசிசிஐ-யால் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் ஸ்ரேயஸுக்காக பஞ்சாப் கோப்பை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோகராஜ் சிங், பஞ்சாப் அணி கோப்பையை வெல்லும் என்றும், ஆனால் கோலியை அவுட்டாக்காவிட்டால் அது கடினம் என்றும் தெரிவித்திருக்கிறார்.
தனியார் ஊடகத்திடம் இதுபற்றி பேசிய யோகராஜ் சிங், "விராட் கோலியைப் பஞ்சாப் விக்கெட் எடுக்காவிட்டால் நெருக்கடிக்குள்ளாவார்கள்.
கோலி அவுட்டாகவில்லையென்றால் அவரால் 250, 300 ரன்களைக் கூட சேஸ் செய்ய முடியும். எனவே முதல் 10 ஓவர்களுக்குள் கோலியை அவுட்டாக்கவில்லையென்றால் பஞ்சாப்பின் ஆட்டம் முடிந்துவிடும்.
இருப்பினும், பஞ்சாப் அணி வெல்லும் என்று என் உணர்வுகள் கூறுகின்றன. பஞ்சாப் அணிக்கு ஒரு அற்புதமான கேப்டன் இருக்கிறார்.
இந்தப் போட்டியானது பஞ்சாப் அணிக்கும் கோலிக்கும் இடையே நடக்கும் போட்டி. ஆர்.சி.பி-யில் கோலி இருந்தால், பஞ்சாப்பில் ஸ்ரேயஸ் இருக்கிறார். பஞ்சாப் அணி வெற்றி பெற வேண்டும்.
கோலியால் எந்த நிலையிலிருந்தும் ஆர்.சி.பி-யை வெற்றி பெறவைக்க முடியும் என்றால், ஸ்ரேயஸாலும் அதைச் செய்ய முடியும்." என்று கூறினார்.
இறுதிப்போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற தங்களின் கருத்துக்களை கமெண்ட்டில் பதிவிடவும்.