செய்திகள் :

Trump Tariff : `சீன பொருட்களுக்கு 104% வரி' - அதிரடியாக அறிவித்த அமெரிக்கா

post image

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 26 சதவீத வரி விதித்துள்ளார். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அதிக பட்சமாக 50 சதவீதம் அளவுக்கு வரி விதித்து இருந்தார். இதற்கு எதிர்வினையாற்றிய சீனா, "சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்கப் பொருட்களின் மீது 34 சதவிகித வரி விதிக்கப்படும். இது வரும் ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது" என்று அறிவித்தது. இது சீனா - அமெரிக்கா இடையேயான வர்த்தக போரை கிளப்பியிருக்கிறது.

ட்ரம்ப் - ஜி ஜின்பிங்|'
ட்ரம்ப் - ஜி ஜின்பிங்|

"இந்த வரியை நீக்காவிட்டால் சீன இறக்குமதிப் பொருட்களுக்கு அமெரிக்காவில் கூடுதலாக 50 சதவிகிதம் வரி விதிக்கப்படும்" என ட்ரம்ப் எச்சரித்திருந்தார். இந்த நிலையில், சீனப் பொருட்கள் அனைத்திற்கும் கூடுதலாக 50 சதவிகித வரி விதிக்கப்படும் என டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் சீன பொருட்களுக்கான அடிப்படை வரியாக 10%, ஏற்கனவே அமலில் உள்ள 10%, தற்போது புதிதாக ட்ரம்ப் விதித்த வரி 34% மற்றும் தற்போது அமெரிக்க அரசு உயர்த்தியுள்ள 50% என சீனப் பொருட்கள் மீதான வரி அமெரிக்காவில் மொத்தம் 104 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இது உலக அரசியலில் பெரும் விவாதப்பொருளாகியிருக்கிறது.

Article 142, உச்ச நீதிமன்றம் : "ஜனநாயக சக்திகளுக்கு எதிரான அணு ஏவுகணை" - ஜக்தீப் தன்கர் காட்டம்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காததையடுத்து, திமுக அரசு தாக்கல் செய்த ரிட் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஏப்ரல் 8-ம் தேதியன்று ஒரு அ... மேலும் பார்க்க

`குளோபல் ஜாப் மார்க்கெட்; எனது கனவு’ - துணைவேந்தர்கள் கூட்டத்தில் முதல்வர் பேசியதென்ன?

தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்."'போதும்' என நினைக்கக் கூடாது" இதில் பேசி... மேலும் பார்க்க

Article 142 மூலம் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த உச்ச நீதிமன்றம் - விவாதிக்கப்படுவது ஏன்? | In-Depth

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கெதிரான தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநிற... மேலும் பார்க்க

நாங்குநேரி சின்னதுரை மீது மீண்டும் கொடூர தாக்குதல் - 5 பேர் கொண்ட மர்மக் கும்பல் யார்?

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை, 2023-ம் ஆண்டு பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்த போது சாதிய பாகுபாடு காரணமாக சக மாணவர்களால் வீடு புகுந்து கொடூரமாக அரிவாளால் வெட்டப்பட்டார். அதில்... மேலும் பார்க்க

`திமுக நீர் மோர் பந்தலுக்காக குப்பை வண்டியில் சென்ற குடிநீர்' - அதிர்ச்சி வீடியோ, வலுக்கும் கண்டனம்

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே சாமளாபுரம் பேரூராட்சித் தலைவராக உள்ளவர் திமுக-வைச் சேர்ந்த விநாயகா பழனிசாமி. இவரது ஏற்பாட்டில் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி, சாமளாபுரத்தில் நீர் மோர் பந்தல் ... மேலும் பார்க்க

``நீங்க வசிப்பது வக்ஃப் நிலம்; வாடகை கொடுங்க...’’ - ஒரு கிராமமே அதிர்ச்சி; என்ன நடக்கிறது வேலூரில்?

வேலூர் மாவட்டம், இறைவன்காடு ஊராட்சிக்குட்பட்ட காட்டுக்கொல்லை கிராமத்தில் வீடுகள் கட்டி வசித்து வரும் 150 குடும்பங்களிடம் திடீரென மாதாந்திர தரை வாடகை கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது விரிஞ்சிபுரம் பக... மேலும் பார்க்க