செய்திகள் :

TVK Vijay: "ஒரு அரசியல் தலைவர் மக்களைச் சந்திக்க முடியாத சூழல்" - அரசை விமர்சிக்கும் தமிழிசை

post image

தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த பல்வேறு அரசியல் மோதல்களுக்கு நடுவில், கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

அதைத் தொடர்ந்து, கரூரில் உயிரிழந்த குடும்பத்துக்கு தவெக தலைவர் விஜய் ரூ. 20 லட்சத்தை நிவாரணமாக வழங்கினார். அதே நேரம், கரூரில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதற்கிடையில் தவெக தலைவர் கரூர் செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு கரூரில் பாதிக்கப்பட்ட 37 குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவழைத்து தவெக தலைவர் சந்தித்தார்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து கவனித்துக்கொள்வதாகவும் ஆறுதல் கூறியதாக தகவல் வெளியானது. அதே நேரம் தவெக தலைவர் விஜய் நேரில் செல்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வரவழைத்து சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.

இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கரூர் மக்களை நேரில் வரவழைத்து விஜய் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த தமிழிசை, ``தமிழ்நாட்டில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் சுதந்திரமாக ஒரு இடத்துக்குச் சென்று மக்களைச் சந்திக்க முடியாத சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறது என்ற உண்மையை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது இயற்கையான விஷயம். ஆனால், நினைத்த நேரத்தில் அனுமதி பெறாமலோ, அல்லது அனுமதி பெற்றும்கூட ஒரு இடத்துக்குச் செல்ல முடியவில்லை. இதுதான் இப்போது தமிழ்நாட்டின் கள எதார்த்தம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

முதல்வர் விஜய்யா? ADMK உடன் கூட்டணியா? - TVK Arun Raj Interview

கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் முதலாக தவெக நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்தில் கூடி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். விஜய்யின் அடுத்தக்கட்ட பிரசாரப் பயணம் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டிருக்கிறது... மேலும் பார்க்க

துணை ஜனாதிபதி நிகழ்ச்சி; `போலீஸ் விளக்கம் ஏற்க முடியாது; மத்திய அரசு உதவி நாடுவோம்'- வானதி சீனிவாசன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன், “துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய திட்டமிடப்பட்டது. ... மேலும் பார்க்க

கேரளா: `பெண்களுக்கு மாதம் ரூ.1000'- புதிய அறிவிப்புகளை வெளியிட்ட பினராயி விஜயன்!

கேரள மாநிலத்தில் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து 2026 ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதை கருத்தில் கொண்டு இப்போதே பல தாராள திட்டங்களை அறிவித்துள்ளார் கேரள முதல்வ... மேலும் பார்க்க

SIR மூலம் வாக்குத் திருட்டு; பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க நவம்பர் 2-ல் அனைத்து கட்சி கூட்டம்

தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், “கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய பிரேமாவிற்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தி... மேலும் பார்க்க

Trump: 'ரொம்பக் கெடுபிடியானவர்; போரை நாங்கள் தொடர்வோம் என்றார்'- மோடி குறித்து டிரம்ப் பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி குறித்துப் பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.தென் கொரியாவில் ஆசியா - பசிஃபிக் பொருளாதார ஒத்துழைப்புக் கூட்டமைப்பின் ( APEC) தலைவர்கள் கல... மேலும் பார்க்க