செய்திகள் :

UP: உயிரோடுள்ள மனைவிக்கு ஈமக்காரியம் செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த கணவன்; மனைவி போலீஸில் புகார்

post image

உத்தரப்பிரதேசத்தில் மனைவி உயிரோடு இருக்கும்போது தனது காதலியைத் திருமணம் செய்வதற்காக மனைவி இறந்துவிட்டதாக ஒருவர் நாடகம் ஆடியிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் கன்னுஜ் மாவட்டத்தில் உள்ள தலகிராம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பவானி சராய் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பவன் பட்டேல். இவருக்கு ஏற்கனவே பூஜா என்ற மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். மனைவியைக் கைவிட்டுவிட்டு தனது இரண்டு குழந்தைகளை மட்டும் பவன் பட்டேல் தன்னுடன் அழைத்து சென்று வாழ்ந்து வந்தார். பவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பு இருந்ததாகத் தெரிகிறது. இதையடுத்து அப்பெண்ணைத் திருமணம் செய்வதற்காக மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார்.

சடங்குகள்

இதையடுத்து பவன் மனைவி பூனா தனது குழந்தைகள் இரண்டு பேரையும் அழைத்துக்கொண்டு கான்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வந்தார். அதேசமயம் பவன் பட்டேல் தனது மனைவி இறந்துவிட்டதாகக் கூறி அதற்கான ஈமக்காரியங்களைச் செய்திருக்கிறார். மேலும், தனது காதலியைத் திருமணம் செய்து கொண்டதோடு தனது மனைவியிடம் இருந்த இரண்டு குழந்தைகளையும் கடத்திக்கொண்டு வந்து தன்னுடன் வைத்துக்கொண்டார். இது குறித்து பவன் பட்டேல் மனைவி காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

காவல்துறையில் கொடுத்துள்ள புகாரில்...

தான் உயிரோடு இருக்கும் போது இறந்துவிட்டதாகக் கூறி சடங்குகள் செய்து மரணத்தைச் சட்டப்பூர்வமாக்க முயல்வதாகவும், தனது குழந்தைகளைக் கடத்திச் சென்றதோடு தன்னை அனாதையாக விட்டுவிட்டதாகவும் காவல்துறையில் கொடுத்துள்ள புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் வீட்டிற்கு வேறு ஒரு பெண்ணை அழைத்து வந்து வாழ்ந்தார். அதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு எனது பெற்றோர் வீட்டில் சென்று வசித்து வந்தேன். ஆனால் நான் இறந்துவிட்டதாகக் கூறி எனது கணவர் 13வது நாள் காரியத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார் .

சடங்குகள்

எனது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து சடங்குகள் செய்துள்ளார். அதற்குத் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைத்துள்ளார். இந்த நிகழ்வைத் தனது சோசியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளார். எனது மரணத்தை உறவினர்களிடம் தெரிவித்துவிட்டு வேறு ஒரு பெண்ணை முறைப்படி திருமணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். என்னிடம் இருந்த குழந்தைகளையும் கடத்திச்சென்றுவிட்டார்" என்று குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Vikatan Weekly Quiz: விஜய் TVK முதல் மாநாடு `டு' ரத்தன் டாடா உயில்... இந்த வார போட்டிக்கு ரெடியா?

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, ரத்தன் டாடா எழுதிவைத்த உயில், சர்வதேச கால்பந்தாட்டத்தில் 50 கோல்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை, ஒடிசாவைத் தாக்கிய புயல் என இந்த வாரத்தில் பல்வேறு மு... மேலும் பார்க்க

Bryan Johnson: "மரபணுவால் வரும் முடி உதிர்வையும் சரி செய்யலாம்" - பிரையன் ஜான்சன் சொல்லும் ரகசியம்

மென்பொருள் நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துக்களை வைத்திருப்பவர் பிரையன் ஜான்சன் (46). விரைவில் முதுமை அடைவதைத் தடுக்கும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்காகவும், சிகிச்சைகளுக்காக... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா தேர்தல்: அமித் ஷாவுடன் நாள் முழுக்க நீண்ட பேச்சுவார்த்தை; இருந்தும் நீடிக்கும் இழுபறி!

முடிவுக்கு வராத பங்கீடுமகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல்மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தல் நவம்பர் 20-ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இத்தேர்தலில் ஆளும் மஹாயுதி மற்றும் எதிர்க்கட்சிகளின் மகாவிகாஷ் அகாடியில் இன்னு... மேலும் பார்க்க

Jio - Hotstar : டொமைனை வைத்துக்கொண்டு ரூ.1 கோடி கேட்கும் டெவலபர் - என்ன செய்யப்போகிறது ரிலையன்ஸ்?

டெல்லியைச் சேர்ந்த டெவலபர் ஒருவர் Jiohotstar.com என்ற டொமைனை வாங்கி வைத்துள்ளார். ஜியோ மற்றும் ஹாட்ஸ்டார் தளங்கள் இணைவது உறுதியாகியிருக்கும் நிலையில், இவர் இந்த டொமைனை அளிப்பதற்கு சில நிபந்தனைகளை வைத்... மேலும் பார்க்க

`அஜித் பவாருக்கே கடிகாரம் சின்னம்'- கைவிட்ட சுப்ரீம் கோர்ட்... சரத் பவாருக்குப் பின்னடைவு!

மகாராஷ்டிராவில் முன்னாள் மத்திய அமைச்சர் சரத் பவார் தொடங்கிய தேசியவாத காங்கிரஸ் கட்சியை அவரது சகோதரர் மகன் அஜித் பவார் கடந்த ஆண்டு இரண்டாக உடைத்தார். அவர் இப்போது பா.ஜ.க-வோடு கூட்டணி அமைத்து துணை முதல... மேலும் பார்க்க

திருவாரூர்: மனுநீதிச் சோழன் நினைவு கல்தேர்; தொய்வுடன் நடைபெறும் திருப்பணி - மக்கள் வேதனை

திருவாரூர் மாவட்டம், தியாகராஜ சுவாமி திருக்கோயிலின் விட்டவாசல் பகுதியில் அமைந்துள்ளது மனுநீதிச் சோழன் நினைவு கல்தேர்.மனுநீதிச் சோழன் என்பவர் திருவாரூர் மண்ணை ஆண்ட சோழ மன்னன் ஆவார். இன்னும் நீதி தவறாமை... மேலும் பார்க்க