செய்திகள் :

US: ``ட்ரம்ப், ஜே.டி.வான்ஸ் இருவரும் புதினுக்காக செயல்படும் முட்டாள்கள்'' - சாடும் வான்ஸின் உறவினர்

post image

உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது ட்ரம்புடன் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உடன் உருந்தார். வெள்ளை மாளிகையில் நடந்த இந்த சந்திப்பில், உக்ரைன் போர் அமைதி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடங்கி பெரும் வாக்குவாதத்தில் முடிந்தது.

Nate Vance

மூன்று வருடப் போரில் அமெரிக்காவின் உதவிக்கு உக்ரைன் நன்றி தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. அதனால், கனிமவள ஒப்பந்தம் நிறைவேற்றாமலே இந்த சந்திப்பு முடிவடைந்தது. ட்ரம்ப், புதினின் குரலில் பேசுவதாக ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த நிலையில் இரு நாட்டின் அதிபர்களுக்கு மத்தியில் நடந்த இந்த விவாதம் உலகளவில் கவனம் பெற்றது.

இந்த நிலையில், உக்ரைன் அதிபரை அவமானப்படுத்தியதாக அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் உறவினர் அமெரிக்க அதிபரையும், துணை அதிபரையும் விமர்சித்திருக்கிறார். ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு உக்ரேனிய இராணுவத்துடன் மூன்று ஆண்டுகள் தன்னார்வத் தொண்டு செய்துவரும் நேட் வான்ஸ் - "அரசியல் தலைவர்களிடம், குறிப்பாக கேமராக்களுக்கு முன்னால் ஒரு குறிப்பிட்ட அலங்கார நிகழ்வுகள் இருக்கிறது. ஆனால், வெள்ளை மாளிகையில் என் உறவினரும், ட்ரம்பும், ஊடகங்களும் மற்றொரு நாட்டின் அதிபரை கையாண்ட விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை.

ட்ரம்ப்பும், ஜே.டி வான்ஸும் இருநாட்டு மோதலைக் கையாள்வதில் புதினுக்காக செயல்படும் பயனுள்ள முட்டாள்கள் போல் இருக்கிறார்கள். எனக்கு உக்ரைன் பிரச்னையில் ஒருவித ஈடுபாடு உண்டு. இது தீர்க்கப்படவேண்டியது. ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். தினமும் இரவில் மக்களிடம் உரையாற்றும் ஜெலன்ஸ்கி எங்களுடன் நிற்கும் நண்பர்களுக்கு நன்றி எனக் குறிப்பிடுகிறார்" எனத் தெரிவித்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

``பிரதான் திமிராக பேசுகிறார், பிளாக்மெயில் செய்கிறார், ஆனால்.." - முதல்வர் ஸ்டாலின் சொல்வதென்ன?

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1285 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டி இருக்கிறார். அடிக்கல் நாட்டு விழாவில் தேசிய கல்வி கொள்கைக் குறித்தும் தர்மேந்திர பிரதான் கு... மேலும் பார்க்க

கடலூர்: ``பெண் என்பதால் புறக்கணிக்கிறீர்களா..?” - மாநகராட்சி அதிகாரிகளிடம் வெடித்த மேயர் சுந்தரி

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ரூ.2.24 கோடி செலவில் வணிக வளாகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி, நேற்று காலை நடைபெறும் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையி... மேலும் பார்க்க

``மக்களவையின் மரபை மீறிய தர்மேந்திர பிரதானை பதவியிருலிந்து நீக்க வேண்டும்.." - திருமாவளவன் கோரிக்கை

நேற்று நடந்த நாடாளுமன்ற மக்களவையில் புதியக் கல்விக் கொள்கை, இந்தி திணிப்புக்கு எதிராக விவாதம் நடந்தது. அப்போது பேசிய மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்ற மக்களவையில் தமிழ்நாட்டைச்... மேலும் பார்க்க

``ஜெயலலிதா இருந்திருந்தால்?..” - வைத்திலிங்கம் குறித்து சசிகலா நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சந்திப்பு!

அதிமுக முன்னாள் அமைச்சரான வைத்திலிங்கம் தற்போது அதிமுக உரிமை மீட்பு குழுவான ஓ.பி.எஸ் அணியில் இருக்கிறார். உடல் நலக் குறைபாடு தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த வைத்திலிங்கம் ஒரத்தநாடு அருகே உள்ள... மேலும் பார்க்க

Health: சாலையோரம் அறுகம்புல் சாறு... குடித்தால் பலன் கிடைக்குமா?

சித்த மருத்துவத்தில் மிக முக்கியமான மருந்தாகக் கருதப்படுகிற மூலிகைகளில் ஒன்று, அறுகம்புல். இது நீர்ப்பதம் உள்ள எல்லா இடங்களிலும் வளரக்கூடியது.நம் முன்னோர்கள், இந்த அரிய மூலிகையை, உணவின் ஒரு பகுதியாகவே... மேலும் பார்க்க

``விஜய் கொள்கைகளை வரவேற்கிறோம். ஆனால்..." - துரை வைகோ சொல்வதென்ன?

மதுரையில் நடந்த மதிமுக நிர்வாகி குடும்ப விழாவில் கலந்துகொண்ட துரை வைகோ செய்தியாளர்களிடம் பேசும்போது "மக்காச்சோளத்துக்கு செஸ் வரி போட்டிருந்ததை நீக்க வேண்டும் என்று முதல்வரையும், துணை முதல்வரையும் நிதி... மேலும் பார்க்க