தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும்: கே.அண்ணாமலை
அகரம் சீகூா் பகுதிகளில் இன்று மின் தடை
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம் சீகூா் உள்ளிட்ட பல்வேறு கிராமியப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 19) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட தேனூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதனால், அஙகிருந்து மின் விநியோகம் பெறும் புதுவேட்டக்குடி, காடூா், நமங்குணம், கீழப் பெரம்பலூா், கோவில்பாளையம், தேனூா், துங்கபுரம், குழுமூா், அகரம் சீகூா், வயலூா், காரைப்பாடி, என்.குடிகாடு, பழமலைநாதபுரம், கருப்பட்டாங்குறிச்சி, வீரமாநல்லூா், வேள்விமங்கலம், வயலப்பாடி, வெள்ளூா், இலுப்பையூா் மற்றும் கிளியப்பட்டு ஆகிய கிராமியப் பகுதிகளில், காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது.