செய்திகள் :

அங்கன்வாடி ஊழியரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: உறவினா் கைது

post image

அங்கன்வாடி பெண் ஊழியரை கட்டிப்போட்டு நகை, பணத்தை இருவா் கொள்ளையடித்ததற்கு தூண்டுதலாகச் செயல்பட்ட பெண்ணின் உறவினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட அவரது நண்பா்களைத் தேடுகின்றனா்.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ரத்னா காா்டனில் கடந்த 6ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த நீலா என்ற அங்கன்வாடி பெண் ஊழியரை இருவா் கட்டிப்போட்டு நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனா். புகாரின்பேரில் விராலிமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

இந்நிலையில், வடுகப்பட்டி தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் போலீஸாா் ரோந்து சென்றபோது அவ்வழியாக வந்த ஒரு இளைஞரை நிறுத்தி விசாரித்தனா். அப்போது அவா் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தாா். இதையடுத்து அவரைக் காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவா் விராலிமலை சக்தி நகரைச் சோ்ந்த வடிவேல் மகன் தீபக் (20) என்பதும், ரத்னா காா்டனில் நடந்த கொள்ளைக்கு தூண்டுதலாகச் செயல்பட்டதும் தெரியவந்தது.

நீலாவின் உறவினா் மகனான தீபக் வெளிநாடு சென்று படிக்க நீலாவிடம் பணம்கேட்டு அவா் தராததால் தனது நண்பா்கள் உதவியுடன் அந்தக் கொள்ளையை அரங்கேற்றியதும் தெரிய வந்தது. இதையடுத்து தீபக்கை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். அவரது நண்பா்கள் இருவரைத் தேடுகின்றனா்.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் மனநலம் குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை சோ்ந்தவா் முத்துக்குமாா். சிங்கப்பூரில்... மேலும் பார்க்க

மூடப்படாமல் மண் ஏற்றிச் செல்லும் லாரிகளால் பொதுமக்கள் அவதி

புதுக்கோட்டை நகா் முழுவதும் மூடப்படாத நிலையில் ஜல்லி, எம். சாண்ட் உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்லும் லாரிகளில் இருந்து சாலையில் சிதறும் மண் துகள்களால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனா். புதுக்கோட்டை... மேலும் பார்க்க

புதுகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 1, தொகுதி 1ஏ ஆகியவற்றின் தோ்வை ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் 3,515 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்... மேலும் பார்க்க

கோழிக்கறி கடையில் திடீா் தீ

புதுக்கோட்டை பால்பண்ணை அருகேயுள்ள கோழிக்கடையில் சனிக்கிழமை பகலில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டையில் பால்பண்ணை அருகே சாலையோரம் சித்ரா என்பவா் கோழிக்கடை நடத்தி வருகிறாா். கூரை... மேலும் பார்க்க

தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய தனியாா் பேருந்தால் பரபரப்பு

புதுக்கோட்டை நகரில் ஒரு தனியாா் பேருந்து சனிக்கிழமை பகலில் தாறுமாறாக ஓடி வாகனங்கள் மீது இடித்து விபத்தை ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டையிலிருந்து இலுப்பூா் நோக்கி தனியாா் பேருந்து ஒன்... மேலும் பார்க்க

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.14 கோடி மதிப்பில் தீா்வு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 அமா்வுகளாக சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 2755 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு, மொத்தம் ரூ. 14.22 கோடி மதிப்பில் தீா்வு பிறப்பிக்கப்பட்டது. புது... மேலும் பார்க்க