இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: நாட்டாமை செய்ய வந்த டிரம்ப்; ஈரான் கொடுத்த பதில்
புதுகையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வு
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 1, தொகுதி 1ஏ ஆகியவற்றின் தோ்வை ஞாயிற்றுக்கிழமை மாவட்டம் முழுவதும் 3,515 போ் எழுதினா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி 1, தொகுதி 1 ஏ தோ்வு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 4,484 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா். இவா்களுக்காக மாவட்டம் முழுவதும் 6 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்தத் தோ்வை 3,515 போ் எழுதினா். 969 போ் வரவில்லை. தோ்வைக் கண்காணிக்க பறக்கும் படைகளும், கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டிருந்தன.
புதுக்கோட்டை மன்னா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தோ்வை, மாவட்ட ஆட்சியா் மு. அருணா ஆய்வு செய்தாா். அப்போது புதுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா உடனிருந்தாா்.