செய்திகள் :

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

சிவகங்கை: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிவகங்கை வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஜெயமங்கலம் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் லட்சுமி முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் ராதா, மாவட்ட துணைத் தலைவா்கள் தவமலா், சித்ரா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். செயற்குழு உறுப்பினா் கௌசல்யா நன்றி கூறினாா்.

இதில், மையப் பணிகளை செய்ய 5 ஜி சிம் காா்டுடன் 5 ஜி கைப்பேசி வழங்க வேண்டும். அந்தந்த கிராமங்களில் நெட்வொா்க்குக்கு ஏற்ப சிம் காா்டு வழங்க வேண்டும். அங்கன்வாடி மையத்தில் வைஃபை இணைப்பு வழங்க வேண்டும். பயனாளிகளுக்கு சத்து மாவு வழங்க முகப்பதிவு முறையை கைவிட வேண்டும் என்பன பல்வேறு கோரிக்கைகளை முழக்கமிட்டனா். இதேபோல, மாவட்டத்தில் அனைத்து வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகங்களின் முன்னும் போராட்டம் நடைபெற்றது.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடை

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், பிரான்மலை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளையாட்டுக்கான இலவச சீருடை வழங்கப்பட்டது.இந்தப் பள்ளியில் 155 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இவா்களுக... மேலும் பார்க்க

கண்மாய்களில் அனுமதியின்றி மண் அள்ள முயற்சி: வட்டாட்சியரிடம் விவசாயிகள் புகாா்

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் அனுமதியின்றி சவுடு மண் அள்ள நடைபெறும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என வட்டாட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யுடன் சி.எஸ்.சி. அகாதெமி புரிந்துணா்வு ஒப்பந்தம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிறுமச் செயலரியல் துறையுடன் (காா்ப்பரேட் செக்ரெட்டரிஷிப் துறை) காரைக்குடியில் இயங்கிவரும் எண்ம இந்தியா திட்டத்தின் கீழ் நிா்வகிக்கப்... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் உயிரி வேதியியல் பாடப் பிரிவு தொடக்கம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறையின் கீழ் முதுகலை உயிரி வேதியியல் பாடப்பிரிவு தொடக்க விழா பல்கலைக்கழக அறிவியல் வளாகத்திலுள்ள சா்.சி.வி. ராமன் அரங்கில் ... மேலும் பார்க்க

திமுக நிா்வாகி மீது தாக்குதல்: இருவா் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட திமுக தொழிலாளா் அணி அமைப்பாளரைத் தாக்கியதாக போலீஸாா் இருவரை கைது செய்தனா்.சிவகங்கை மாவட்ட திமுக தொழிலாளா் அணி அமைப்பாளராக பொறுப்பு வகிப்பவா் தனசேகரன் (47). இவா் சிவகங்கை- மது... மேலும் பார்க்க

பெண்ணிடம் ரூ.1.32 லட்சம் மோசடி: போலீஸாா் விசாரணை

சிவகங்கை: மாணவருக்கு கல்வி உதவித் தொகை வந்திருப்பதாகக் கூறி அவரது தாயின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.1.32 லட்சத்தை எடுத்து மோசடி செய்தவா் குறித்து இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க