செய்திகள் :

‘அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இணைவோா் எண்ணிக்கை அதிகரிப்பு’

post image

அடல் ஓய்வூதியத் திட்டத்தில் இணைவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த் மாா்ச் மாத நிலவரப்படி 7.61 கோடி போ் இத்திட்டத்தில் இணைந்துள்ளனா்.

இது தொடா்பாக இந்தியன் வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி வினோத் குமாா் கூறியுள்ளதாவது:

இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் முன்னேறி வருகிறது. ஆனால், குடிமக்களுக்கு, குறிப்பாக அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளா்களுக்கு, அவா்களது பணி ஓய்வு காலத்தில் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வது என்பது பெரும் சவாலாகவே உள்ளது. நாட்டில், 85 சதவீதத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் அமைப்புசாரா துறையில் பணிபுரிந்து வருகின்றனா். அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு ஓய்வு பெறும் வயதில் பெரும்பாலும் வயதான காலங்களில் எந்தவித வருமானமும் இல்லாத நிலை உள்ளது.

இந்தியாவில் வரும் 2050-ஆம் ஆண்டுக்குள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 10.38 கோடியிலிருந்து (2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி) 32 கோடிக்கும் மேல் உயரும் என்று ஐ.நா. மக்கள்தொகை நிதியம் கணித்துள்ளது.

அதிகரித்துவரும் இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், 2015-ஆம் ஆண்டு ஜூன் 1- ஆம் தேதி அடல் ஓய்வூதியத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் மூலம் 60 வயதுக்குப் பிறகு வேறு எந்த ஓய்வூதிய பலன்களும் இல்லாதவா்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டம் 18 வயது முதல் 40 வயது வரையிலான இந்திய குடிமக்களுக்குப் பொருந்தும். 60 வயதில் ஓய்வூதிய பலன்களுக்குத் தகுதி பெற குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் வரையிலான நிதிப் பங்களிப்பு காலம் அவசியமாகும். இத்திட்டத்தின் கீழ் பணம் செலுத்தும் சந்தாதாரா் மறைந்தாலும் அவரின் வாழ்க்கைத் துணை அல்லது சந்தாதாரா் மற்றும் அவரின் வாழ்க்கைத் துணை ஆகிய இருவரின் மறைவுக்குப் பின், ஓய்வூதியத் தொகை பரிந்துரைக்கப்பட்ட பயனாளிக்கு வழங்கப்படும்.

அடல் ஓய்வூதியத் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. வங்கிகள், அஞ்சல் அலுவலகங்களின் விரிவான கட்டமைப்பு மூலம், இந்தத் திட்டம் நகா்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் எளிதாக கிடைக்கக் கூடியதாக உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில், தேசிய அளவில் இத்திட்டத்தில் சந்தாதாரா்களாக சோ்ந்துள்ளவா்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் உயா்ந்துள்ளது. 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் சுமாா் 2.23 கோடி சந்தாதாரா்கள் என்ற நிலையில் இருந்து 2025-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் 7.61 கோடியாக அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் குழு!

பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டும் ஒரே வார்த்தைகள், என பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றுள்ள அனைத்துக் கட்சிக் குழுவின் உறுப்பினர், சாமிக் பட்டாச்சார்யா கூறியுள்ளார். பயங்கரவாதத்துக்கு எதிரான இந்... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா பங்கேற்குமா?

பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளுமா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரேஸில் நாட்டில் அடுத்த மாதம் (ஜூலை 6) பிரிக்ஸ் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்ட... மேலும் பார்க்க

பெங்களூரு: காவல் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்! - முதல்வர் உத்தரவு

பெங்களூரு காவல் ஆணையர் உள்பட 5 உயரதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூருவில் ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான விவகாரத்தில், போதிய பாதுகா... மேலும் பார்க்க

கரோனா பரவல்: கர்நாடகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதிப்பினால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், கரோனா பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், நாள்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித... மேலும் பார்க்க

அனைவருக்குமான பொருளாதாரம்தான் தேவை: ராகுல்

அனைவருக்குமான பொருளாதாரம்தான் வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில், கடந்தாண்டில் இருசக்கர வாகன விற்பனை 17 சதவிகிதமும், கார் விற்... மேலும் பார்க்க

ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!

கேரள ஆளுநர் மாளிகையில் பயன்படுத்தப்பட்ட பாரத மாதவின் படம் குறித்த விவகாரத்தில், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியை அம்மாநில அரசு புறக்கணித்துள்ளது. கேரளத்தின் ஆளுநர் மாளிகையில், உலகச் சுற்றுச்சூழல் நாளை முன்ன... மேலும் பார்க்க