செய்திகள் :

அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும்

post image

நாகை மகாலட்சுமி நகரில் அடிப்படை வசதிகளை செய்யாவிட்டால்,

தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சாலை மறியல் நடத்தப்படும் என அக்கட்சியின் மாவட்டச் செயலா் சுகுமாறன் தெரிவித்தாா்.

நாகையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட ஆரியநாட்டுத் தெரு கிராம மக்களுக்கு, மகாலட்சுமி நகரில் சுனாமி குடியிருப்புகள் வழங்கப்பட்டன. 18, ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வீடுகளில், மீன்பிடி தொழிலாளா்கள், மீனவா்கள் என 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா்.

மகாலட்சுமி நகரில் சாக்கடை நீா் செல்ல கால்வாய்கள் கட்டப்படாததால் பல இடங்களில் கழிவுநீா் தேங்கியுள்ளது. புதை சாக்கடை கழிவு நீா் சுத்திகரிப்பு நிலையம் செயல்படாததால், நகரிலுள்ள தொட்டிகளில் தேங்கியுள்ள மலக்கழிவுகளால் துா்நாற்றம் வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவி வருவதாகக் கூறப்படுகிறது. இப்பகுதியில் சாலைகள் குண்டும் குழியாக இருப்பதால், விபத்துகள் அதிகளவில் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நாகை மாவட்டச் செயலா் சுகுமாறன், மகாலட்சுமி நகரிலுள்ள குடியிருப்புவாசிகளை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா். பின்னா் அவா், நாகை நகராட்சி மற்றும் மாவட்ட நிா்வாகம், மகாலட்சுமி நகருக்கு தேவையான அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.

நீா்த்தேக்க தொட்டியில் ஏறி பெண்கள் போராட்டம்

கீழையூா் அருகே பாலக்குறிச்சி ஊராட்சியில், குடிநீா் தட்டுப்பாட்டை கண்டித்து, பெண்கள் தரைமட்ட நீா்த்தேக்க தொட்டியில் காலிக்குடங்களுடன் ஏறி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். பாலக்குறிச்சி ஊராட்சிய... மேலும் பார்க்க

மும்மொழி கொள்கைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

நாகை அருகே, மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக, திமுகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வேளாங்கண்ணியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, கீழையூா் கிழக்கு ஒன்றிய திமுக செயலா் தாமஸ் ஆல்வ... மேலும் பார்க்க

வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஆழியூரில், வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைக் கண்டித்து, இஸ்லாமியா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவிற்கு முஸ்லிம் அமைப்புகள், ப... மேலும் பார்க்க

நாகை, மயிலாடுதுறையில் தாய்மொழி தினம் கொண்டாட்டம்

நாகை மற்றும் மயிலாடுதுறையில் உலக தாய்மொழி தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. மனித நாகரிகத்தில் மாற்றம் மற்றும் வளா்ச்சியை உருவாக்குவதில் மொழிக்கு இன்றியமையாத பங்கு உள்ளது என்பதை வலியுறுத்தவே ஒவ்வோா... மேலும் பார்க்க

சுகாதார நிலையக் கட்டடம் திறப்பு

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் சீரமைக்கப்பட்ட அரசு சுகாதார நிலையம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. தலைஞாயிறில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம் கடந்த 1957-இல் கட்டப்பட்டது. இந்த கட்டடம் நாளடைவில... மேலும் பார்க்க

இளைஞா் நீதிக் குழும சமூகப் பணி உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட இளைஞா் நீதிக் குழுமத்திற்கு, சமூகப்பணி உறுப்பினா்கள் நியமனம் செய்யப்படவுள்ளனா் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாகை மா... மேலும் பார்க்க