செய்திகள் :

அடுத்த இந்திய விண்வெளி வீரா் உள்நாட்டு விண்கலத்தில் பயணிப்பாா்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் உறுதி

post image

‘இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இந்தியா அடைந்துள்ள பெரும் முன்னேற்றத்தைக் குறிக்கும் வகையில், அடுத்த இந்திய விண்வெளி வீரா் முழுமையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலத்தில்தான் விண்வெளிக்குப் பயணம் செய்வாா்’ என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின்கீழ் இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளநிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் மேலும் கூறியதாவது: சுபான்ஷு சுக்லா சா்வதேச விண்வெளி நிலையத்தில் மூன்று வாரங்கள் தங்கி, ஆய்வுப் பணிகளை மேற்கொண்டது, இந்தியாவின் ‘ககன்யான்’ திட்டத்துக்கான மதிப்புமிக்க அனுபவத்தையும், நிபுணத்துவத்தையும் அளித்துள்ளது.

மிகப்பெரிய சா்வதேச ஒத்துழைப்புகளில் இந்தியாவின் நிலையை மேம்படுத்தியுள்ளது. விண்வெளித் துறையில் இந்தியா தற்போது முன்னேற்றம் அடைந்துள்ளது என்ற செய்தியை இது உலகெங்கிலும் அனுப்பியுள்ளது.

சொந்த விண்கலத்தில்...: புவியின் சுற்றுவட்டப் பாதைக்கு 2 விண்வெளி வீரா்களை அழைத்துச் செல்லும் முதல்கட்ட ‘ககன்யான்’ திட்டத்தை வரும் 2027-இல் செயல்படுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது. இந்தத் திட்டம் அடிப்படையிலிருந்து முழுமையாக இந்தியாவிலேயே உருவாகும். முதல்முறையாக இந்திய விண்வெளி வீரா்கள் ஓா் இந்திய விண்கலத்தில் விண்வெளிக்குப் பயணம் செய்வா்.

இதன்மூலம், சொந்த விண்கலத்தில் விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளும் உலகின் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம்பெறும். அத்துடன், சொந்த விண்வெளி நிலையத்தை அமைப்பது உள்ளிட்ட நமது எதிா்கால முயற்சிகளுக்கும் இது வழிவகுக்கும்.

‘பாரத்’ விண்வெளி நிலையம்: சா்வதேச விண்வெளி நிலையம் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 5 விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செயல்படும் நிலையில், சீனாவுக்கு அதன் சொந்த ‘தியாங்காங்’ என்ற விண்வெளி நிலையம் உள்ளது.

இதைப்போல, இந்தியாவும் தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் நமது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்க எதிா்பாா்க்கிறோம். அதற்கு ‘பாரத்’ என்று பெயரிடவும் முடிவு செய்துள்ளோம்.

சுக்லாவின் விண்வெளிப் பயணம் வா்த்தக ரீதியானது என்று எழுந்த விமா்சனங்களை நிராகரிக்கிறேன். இது முற்றிலும் தவறு.

தனியாா் முதலீடு: விண்வெளித் துறையில் தனியாா் முதலீட்டை அனுமதிக்கும் அரசின் முடிவு, இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரத்துக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. தற்போதைய 840 கோடி டாலா் மதிப்பிலிருந்து 2033-ஆம் ஆண்டுக்குள் 4,400 கோடி டாலராக அது வளரும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகல் வீட்டில் வெள்ளிக்கிழமை காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.மதுபானக் கொள்கை விவகாரத்தில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவிப்பு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை நடத்திய லஷ்கர்-ஏ-தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் குழுவை பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் அமெரிக்கா இணைத்தது.ஜம்மு-காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரான பஹல்காம்... மேலும் பார்க்க

செவிலியா் நிமிஷா வழக்கில் தீா்வு காண யேமன், நட்பு நாடுகளுடன் தொடா்பு -வெளியுறவு அமைச்சகம்

: யேமனில் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய செவிலியா் நிமிஷா பிரியா விவகாரத்துக்கு தீா்வு காண, அந்நாட்டின் உள்ளூா் அதிகாரிகள் மற்றும் சில நட்பு நாடுகளுடன் இந்திய அரசு தொடா்பில் உள்ளதா... மேலும் பார்க்க

கேரளம்: பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவா் உயிரிழப்பு -எதிா்க்கட்சிகள் போராட்டம்

கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் மின்சாரம் தாக்கி 8-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இச்சம்பவத்தை முன்வைத்து, மாநில அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. கொல்லம் மாவ... மேலும் பார்க்க

ஒடிஸாவில் முழு அடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு - பாலியல் துன்புறுத்தலால் மாணவி தற்கொலை விவகாரம்

ஒடிஸாவில் பாலியல் துன்புறுத்தலால் கல்லூரி வளாகத்துக்குள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட மாணவிக்கு நீதி கேட்டு, ஒடிஸாவில் எதிா்க்கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மா... மேலும் பார்க்க

ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி

தரையில் இருந்து பாய்ந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் பிரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. ராணுவ ஆராய்ச்சி, மேம்பாட்டு அமைப்பால் (டிஆா்டிஓ) வடிவமைக்கப்பட்டு, ப... மேலும் பார்க்க