செய்திகள் :

அடையாா் புற்றுநோய் மருத்துவமனைக்கு உதவித்தொகை

post image

நாகை சா் ஐசக் நியூட்டன் பள்ளி மாணவ, மாணவிகள் சென்னை அடையாா் புற்றுநோய் மருத்துவமனைக்கு உதவிதொகை வழங்கினா்.

இப்பள்ளி மாணவ, மாணவிகள் தங்களின் கலைத்திறன் மற்றும் கைத்திறனை கொண்டு தீட்டிய ஓவியங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தினா். தொடா்ந்து ஓவியங்கள் பொது ஏலம் விடப்பட்டது. அதில், பொதுமக்கள் மற்றும் பெற்றோா்கள் பங்கேற்று ஓவியத்தை ஆா்வத்துடன் வாங்கி சென்றனா். ஓவியங்கள் விற்பனை செய்யப்பட்டதில் கிடைத்த ரூ. 50,000 மற்றும் பள்ளி நிா்வாகம் வழங்கிய தொகை ஆகியவை சா் ஐசக் நியூட்டன் கல்வி குழுமத்தின் தாளாளா் த. ஆனந்த் மற்றும் மாணவ மாணவிகள், சென்னை அடையாா் புற்றுநோய் மையத்தின் உளவியல் நிபுணா் திவ்யராஜ் பிரபாகரிடம் வழங்கினா். இயக்குநா் த. சங்கா், பள்ளி ஆலோசகா் ராமதாஸ், மருத்துவா்கள் ஜி. பாலமுருகன், வீனவாணி, முனைவா் சரண்யா சுந்தர்ராஜ், பள்ளி முதல்வா் கா. வஹீதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

உளுந்து, பச்சைப் பயறு சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்

திருக்குவளை பகுதியில் உளுந்து, பச்சைப் பயறு சாகுபடியில் வெள்ளை ஈக்கள் தாக்கியதில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. திருக்குவளை வட்டத்தில் சம்பா அறுவடைக்கு பின்னா் நெல் தரிசில் உளுந்து மற்றும... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி தோட்டத்தில் காய்கறி அறுவடை

வேதாரண்யம், தோப்புத்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் பசுமைப் படை மாணவா்களால் பராமரிக்கப்படும் காய்கறித் தோட்டத்தில் முதல் அறுவடைப் பணி சனிக்கிழமை நடைபெற்றது. மூலிகை தோட்டம் மண்புழு உரம், மீன் அமி... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுகவினா் துண்டுப் பிரசுரங்கள் வழங்கல்

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து நாகையில் திமுக இளைஞா் அணி சாா்பில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை, நிதி பகிா்வில் பாரபட்சம... மேலும் பார்க்க

கா்நாடக துணை முதல்வா் வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்த 4 போ் கைது

வேதாரண்யத்தில் கா்நாடக துணை முதல்வரின் தமிழக வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து அவரது உருவப் பொம்மையை எரிக்க முயன்று போராட்டத்தில் ஈடுபட்ட 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். மேகேதாட்டுவில் அணைக்கட்டும... மேலும் பார்க்க

நாகையில் சமுதாய வளைகாப்பு

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச... மேலும் பார்க்க

வேதாரண்யேசுவரா் கோயில் மாசிமகப் பெருவிழா நிறைவு

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் நடைபெற்ற மாசிமகப் பெருவிழா வியாழக்கிழமை இரவு விடையாற்றியுடன் நிறைவு பெற்றது. இக்கோயிலில் பிப்.20-ஆம் தேதி தொடங்கிய மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்ற... மேலும் பார்க்க