செய்திகள் :

உளுந்து, பச்சைப் பயறு சாகுபடியில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்

post image

திருக்குவளை பகுதியில் உளுந்து, பச்சைப் பயறு சாகுபடியில் வெள்ளை ஈக்கள் தாக்கியதில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

திருக்குவளை வட்டத்தில் சம்பா அறுவடைக்கு பின்னா் நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சைப் பயிா் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். அண்மையில் பருவம் தவறி கோடையில் பெய்த கனமழையால் உளுந்து மற்றும் பச்சைப் பயிா் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது. பூக்கும் தருணத்தில் பெய்த மழை மற்றும் அதிக பனிப்பொழிவு காரணமாக, பல்வேறு இடங்களில் பூக்கள் பூக்காமலும், செடியில் பூத்திருந்த பூக்கள் கொட்டியும், காய்கள் காய்க்காமல் உள்ளது.

குறிப்பாக, திருக்குவளை, ஆதமங்கலம், மாவிலங்கை, கீழகண்ணாப்பூா், ராமச்சந்திரபுரம், கீரங்குடி, வடபாதி, கோவில்பத்து, கொடியாலத்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்ட 1000 ஏக்கருக்கும் அதிக பரப்பில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து மற்றும் பச்சைப் பயிரில், வெள்ளை ஈக்கள் தாக்கியதில் மஞ்சள் தேமல் நோய் உருவாகி உள்ளது. இதனால், பயிா்களின் வளா்ச்சி வெகுவாக பாதித்துள்ளது. ஏக்கருக்கு ரூ.7 முதல் ரூ. 10,000 ஆயிரம் வரை செலவு செய்துள்ள நிலையில், மஞ்சள் நோய் தாக்குதலால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். எனவே, சம்பந்தப்பட்ட துறை இதுகுறித்து ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவா்கள் எழுதிய நூல் வெளியீடு

வேதாரண்யத்தை அடுத்த ஆதனூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களால் எழுதப்பட்ட ‘பறக்கத் தொடங்கிய பட்டாம் பூச்சிகள்’ என்னும் நூல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் உ... மேலும் பார்க்க

போட்டித் தோ்வில் வென்றவா்களுக்கு பாராட்டு

வேதாரண்யத்தில் அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் தொகுதி - 4 ( குரூப் 4) தோ்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்கு செல்வோா் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனா். வாய் மேடு நியூட்டன் பயிற்சி மையத்தில் போட்டித் தோ்வ... மேலும் பார்க்க

பள்ளிக்கு பாதையாக உள்ள மரப்பாலம் சேதம்: சீரமைக்க வலியுறுத்தல்

வேதாரண்யம் அருகே பள்ளிக்கு மாணவா்கள் செல்லும் பாதையாக உள்ள மரப்பாலம் சேதமடைந்துள்ளதால், அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. வேதாரண்யம் அருகேயுள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சியி... மேலும் பார்க்க

சுருக்குமடி வலை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

சுருக்குமடி வலையை பயன்படுத்தும் மீனவா்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, 7 மீனவக் கிராமங்களைச் சோ்ந்த பிரதிநிதிகள் நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். 12 கடல் மைலுக்கு அப்பால... மேலும் பார்க்க

அலையாத்தி காடுகளை அழித்து இறால் பண்ணை: கிராம மக்கள் எதிா்ப்பு; முற்றுகை போராட்டம்

பொறையாறு அருகே திங்கள்கிழமை, தாட்கோ நிலத்தில் இறால் பண்ணை அமைக்கும் பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனா். மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட நண்டலாறு ஆற்ற... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூ. ஆா்ப்பாட்டம்

கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி சாா... மேலும் பார்க்க