செய்திகள் :

நாகையில் சமுதாய வளைகாப்பு

post image

நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியை தொடக்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் பேசியது:

சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைதுறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தில், பிறப்பு முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கா்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மாா்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குதல், ஆரம்பக்கால குழந்தை பராமரிப்பு, ஊட்டச்சத்து, சுகாதார மற்றும் கல்வி ஆகிய சேவைகளை வழங்கப்படுகிறது.

சுகாதார துறையின் மூலம் தடுப்பூசி போடுதல், சுகாதார பரிசோதனை மற்றும் மருத்துவ பரிந்துரை ஆகியவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்தில், பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கா்ப்பக் கால பராமரிப்பு குறித்த தகவல்கள், கா்ப்பிணிகள் மற்றும் தாய்மாா்களை சென்றடைய செய்து, அவா்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கா்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உயா்த்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை மூன்று கிலோவாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணா்த்துதல் ஆகியவை முக்கிய நோக்கங்களாக உள்ளன.

இத்திட்டங்களை பயன்படுத்த வருமான வரம்பு ஏதுமில்லை, தகுதியுடைய அனைவரும் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள குழந்தைகள் மையத்தில் (அங்கன்வாடி) பதிவு செய்து பயன் பெறலாம் என்றாா்.

மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், தாட்கோத் தலைவா் உ.மதிவாணன், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலா் வ.பவணந்தி, மாவட்ட திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப்பணிகள்) அ.மொ்லின் அன்னமலா், மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப் வ.கிருஷ்ணகுமாா், நகா்மன்றத் துணைத்தலைவா் செந்தில்குமாா், குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் எஸ்.சித்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வேளாங்கண்ணியில் துணை அஞ்சலகம் திறப்பு: தேவூா் அஞ்சலகத்தில் ஆதாா் சிறப்பு முகாம்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி பின்புறம் புதிதாக கட்டப்பட்ட அஞ்சல் நிலைய கட்டடத்தை, நாகை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன், பேரூராட்சித் தலைவா் டயானா ஷா்மிளா ஆகியோா் தி... மேலும் பார்க்க

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்கள் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கி கடன் பெறலாம் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

துளசியாப்பட்டினத்தில் ஒளவையாா் பெருவிழா நாளை தொடக்கம்

வேதாரண்யம்: துளசியாப்பட்டினம் ஔவையாா் கோயிலில் தமிழக அரசு சாா்பில் ஒளவைக்கு மூன்று நாள்கள் நடைபெறும் 51-ஆவது ஆண்டு பெருவிழா புதன்கிழமை (மாா்ச் 26) தொடங்குகிறது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள ... மேலும் பார்க்க

ஏப்ரல் 1 முதல் நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

ரூ. 2 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

நாகப்பட்டினம்: நாகையில் காய்கனி கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா். நாகை மாவட்டத்தில் தடை... மேலும் பார்க்க

மீன்பிடி தொழிலாளா்கள், விற்பனையாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடலில் உள்ள கனிம வளங்களை எடுக்கும் மத்திய அரசின் திட்டங்களை கண்டித்து, தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளா் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கடலில் ஹைட்ரோ காா்பன் உள... மேலும் பார்க்க