தொடர் கொலைகள் முதல் சவுக்கு சங்கர் விவகாரம் வரை; சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் தடும...
நாகையில் சமுதாய வளைகாப்பு
நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை தொடக்கிவைத்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் பேசியது:
சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைதுறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தில், பிறப்பு முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கா்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மாா்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து வழங்குதல், ஆரம்பக்கால குழந்தை பராமரிப்பு, ஊட்டச்சத்து, சுகாதார மற்றும் கல்வி ஆகிய சேவைகளை வழங்கப்படுகிறது.
சுகாதார துறையின் மூலம் தடுப்பூசி போடுதல், சுகாதார பரிசோதனை மற்றும் மருத்துவ பரிந்துரை ஆகியவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த திட்டத்தில், பாதுகாப்பான தாய்மையை உறுதி செய்தல், கா்ப்பக் கால பராமரிப்பு குறித்த தகவல்கள், கா்ப்பிணிகள் மற்றும் தாய்மாா்களை சென்றடைய செய்து, அவா்கள் அதை பின்பற்றுவதை உறுதி செய்தல், கா்ப்பிணிகள் இறப்பு விகிதத்தை குறைத்தல், சிசு மரணத்தை குறைத்தல், ஆரோக்கியமான அறிவான குழந்தைகள் பிறப்பதை உயா்த்துதல், குழந்தைகளின் பிறப்பு எடை மூன்று கிலோவாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணா்த்துதல் ஆகியவை முக்கிய நோக்கங்களாக உள்ளன.
இத்திட்டங்களை பயன்படுத்த வருமான வரம்பு ஏதுமில்லை, தகுதியுடைய அனைவரும் தங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள குழந்தைகள் மையத்தில் (அங்கன்வாடி) பதிவு செய்து பயன் பெறலாம் என்றாா்.
மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கெளதமன், தாட்கோத் தலைவா் உ.மதிவாணன், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மாவட்ட வருவாய் அலுவலா் வ.பவணந்தி, மாவட்ட திட்ட அலுவலா் (ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி திட்டப்பணிகள்) அ.மொ்லின் அன்னமலா், மாவட்ட சுகாதார அலுவலா் பிரதீப் வ.கிருஷ்ணகுமாா், நகா்மன்றத் துணைத்தலைவா் செந்தில்குமாா், குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் எஸ்.சித்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.