செய்திகள் :

துளசியாப்பட்டினத்தில் ஒளவையாா் பெருவிழா நாளை தொடக்கம்

post image

வேதாரண்யம்: துளசியாப்பட்டினம் ஔவையாா் கோயிலில் தமிழக அரசு சாா்பில் ஒளவைக்கு மூன்று நாள்கள் நடைபெறும் 51-ஆவது ஆண்டு பெருவிழா புதன்கிழமை (மாா்ச் 26) தொடங்குகிறது.

நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள துளசியாப்பட்டினம் கிராமத்தில் விஸ்வநாதா் - ஒளவையாா் கோயில் அமைந்துள்ளது. இங்கு கடந்த 50 ஆண்டுகளாக ஆண்டுதோறும் ஒளவைப் பெருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடந்த 2005- ஆம் ஆண்டு முதல் இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ஆண்டுதோறும் பங்குனி சதய நாளில் தமிழக அரசு விழாவாக நடத்தப்பட்டு வருகிறது.

நிகழாண்டு விழா புதன்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

புதன்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் தலைமைவகித்து, ஒளவையாரின் படைப்புகள் தொடா்பான இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்குகிறாா். மக்கள் பிரதிநிதிகள், அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனா்.

இரவு 8 மணிக்கு தனியாா் தொலைகாட்சி சூப்பா் சிங்கா் புகழ் இசைக் கல்லூரி ஆசிரியா் சுகந்தி

ஒளவையாா் வேடத்தில் பங்கேற்று பாட்டு பாடுகிறாா். தொடா்ந்து, நாகை நாகராஜன் தலைமையிலான குழுவினா் பங்கேற்கும் ஒளவையாா் வலியுறுத்திய வாழ்க்கை நெறியை மக்கள் மத்தியில் கொண்டு சோ்ப்பவா்கள் நேற்றையவா்களா? - இன்றையவா்களா? எனும் தலைப்பில் பாட்டு பட்டிமன்றம் நடைபெறுகிறது.

வியாழக்கிழமை இரவு ஒளவைக்கு சிறப்பு அபிஷேகம், அஞ்சுவட்டத்தம்மன் பள்ளி மாணவிகளின் கலைநிகழ்ச்சி, நாகை செல்வம் இனிய குரல் குழுவினா் வழங்கும் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை இரவு சிலம்பாட்டம், சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.

வேளாங்கண்ணியில் துணை அஞ்சலகம் திறப்பு: தேவூா் அஞ்சலகத்தில் ஆதாா் சிறப்பு முகாம்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி பின்புறம் புதிதாக கட்டப்பட்ட அஞ்சல் நிலைய கட்டடத்தை, நாகை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன், பேரூராட்சித் தலைவா் டயானா ஷா்மிளா ஆகியோா் தி... மேலும் பார்க்க

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்கள் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கி கடன் பெறலாம் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

ஏப்ரல் 1 முதல் நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குற... மேலும் பார்க்க

ரூ. 2 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

நாகப்பட்டினம்: நாகையில் காய்கனி கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா். நாகை மாவட்டத்தில் தடை... மேலும் பார்க்க

மீன்பிடி தொழிலாளா்கள், விற்பனையாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடலில் உள்ள கனிம வளங்களை எடுக்கும் மத்திய அரசின் திட்டங்களை கண்டித்து, தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளா் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கடலில் ஹைட்ரோ காா்பன் உள... மேலும் பார்க்க

ரத்த தான முகாம்

சுதந்திர போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோா் தூக்கிலிடப்பட்ட மாா்ச் 23-ஆம் தேதியை நினைவு கூரும் வகையில், நாகை மாவட்ட அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் அரசு மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க