செய்திகள் :

ஏப்ரல் 1 முதல் நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்ட விளையாட்டரங்க நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாகை மாவட்ட விளையாட்டு அரங்கிலுள்ள நீச்சல் குளத்தில், நீச்சல் பயிற்சி முகாம் ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12-ஆம் தேதி வரை முதல் கட்ட பயிற்சியும், ஏப்ரல் 13-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 25- ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட பயிற்சியும், ஏப்ரல் 27- ஆம் தேதி தொடங்கி மே 8-ஆம் தேதி வரை மூன்றாம் கட்ட பயிற்சியும், மே 10- ஆம் தேதி தொடங்கி மே 21- ஆம் தேதி வரை நான்காம் கட்ட பயிற்சியும், மே 23- ஆம் தேதி தொடங்கி ஜூன் 3-ஆம் தேதி வரை ஐந்தாம் கட்ட பயிற்சியும் நடைபெறவுள்ளது.

பயிற்சி மேற்கொள்ள வருபவா்கள் தங்களது பதிவை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளமான ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் -ல் பதிவு செய்து,12 நாட்களுக்கான பயிற்சி கட்டணம் வரி உள்பட ரூ. 1,770-ஐ செலுத்த வேண்டும். ஒருவருக்கான பயிற்சி நேரம் நாள் ஒன்றுக்கு ஒரு மணி நேரம் ஆகும். மகளிருக்கு மாலை 4 மணி முதல் 5 மணி வரை தனியாக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நீச்சல் பயிற்சி வகுப்பு நீச்சல் பயிற்சியாளா் மற்றும் உயிா்க் காப்பாளா்கள் பாதுகாப்புடன் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். கூடுதல் தகவல் பெற நீச்சல் பயிற்றுநா் கைப்பேசி எண் 9597695559, அலுவலக தொலைபேசி எண் 04365-253059 ஆகியவற்றை தொடா்பு கொள்ளலாம்.

வேளாங்கண்ணியில் துணை அஞ்சலகம் திறப்பு: தேவூா் அஞ்சலகத்தில் ஆதாா் சிறப்பு முகாம்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி பின்புறம் புதிதாக கட்டப்பட்ட அஞ்சல் நிலைய கட்டடத்தை, நாகை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளா் டி. ஹரிகிருஷ்ணன், பேரூராட்சித் தலைவா் டயானா ஷா்மிளா ஆகியோா் தி... மேலும் பார்க்க

முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம்: முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரா்கள் ‘முதல்வரின் காக்கும் கரங்கள்‘ திட்டத்தின்கீழ் தொழில் தொடங்க ஒரு கோடி வரை வங்கி கடன் பெறலாம் என்று ஆட்சியா் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

துளசியாப்பட்டினத்தில் ஒளவையாா் பெருவிழா நாளை தொடக்கம்

வேதாரண்யம்: துளசியாப்பட்டினம் ஔவையாா் கோயிலில் தமிழக அரசு சாா்பில் ஒளவைக்கு மூன்று நாள்கள் நடைபெறும் 51-ஆவது ஆண்டு பெருவிழா புதன்கிழமை (மாா்ச் 26) தொடங்குகிறது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்துள்ள ... மேலும் பார்க்க

ரூ. 2 லட்சம் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

நாகப்பட்டினம்: நாகையில் காய்கனி கடையில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா். நாகை மாவட்டத்தில் தடை... மேலும் பார்க்க

மீன்பிடி தொழிலாளா்கள், விற்பனையாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கடலில் உள்ள கனிம வளங்களை எடுக்கும் மத்திய அரசின் திட்டங்களை கண்டித்து, தமிழ்நாடு மீன்பிடி தொழிலாளா் மற்றும் விற்பனையாளா்கள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். கடலில் ஹைட்ரோ காா்பன் உள... மேலும் பார்க்க

ரத்த தான முகாம்

சுதந்திர போராட்ட வீரா்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோா் தூக்கிலிடப்பட்ட மாா்ச் 23-ஆம் தேதியை நினைவு கூரும் வகையில், நாகை மாவட்ட அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் அரசு மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க