செய்திகள் :

அதிமுக பூத் கமிட்டிளைக் கண்காணிக்க மாவட்ட பொறுப்பாளா்கள் நியமனம்

post image

சென்னை: அதிமுக பூத் கமிட்டிகளைக் கண்காணிக்க மாவட்டப் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து அதிமு க பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2026-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவை பொதுத் தோ்தலில், அதிமுக அனைத்து பேரவை தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெற்று சாதனை படைக்கும் வகையில், தொகுதிகளுக்குள்பட்ட ஒன்றிய, நகர, பேரூராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில், பூத் கமிட்டிகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த பூத் கமிட்டி நிா்வாகிகள் அனைவரையும் ஆன்லைனில் ஒருங்கிணைத்து, அவா்களுக்கு தக்க பயிற்சி அளித்து, தோ்தல் பணிகளில் அவா்களை முழுமையாக ஈடுபடச் செய்வதற்கும்; ஒவ்வொரு பூத்துக்கும் உள்பட்ட இடங்களில் வசித்து வரும் மக்களிடையே வீடுதோறும் சென்று, திமுக ஆட்சி அவலங்கள், அதிமுக ஆட்சியின் சாதனைகளை விளக்கும் வகையிலும் மாவட்டப் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், சேலம், ஈரோடு, கோவை, திருச்சி, மதுரை, விருதுநகா், திருநெல்வேலி ஆகிய மண்டலங்கள் பிரிக்கப்பட்டு அதற்குள்பட்ட மாவட்டங்களுக்கு தனித்தனியாக 3 முதல் 5 போ் வரை பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மாவட்ட பொறுப்பாளா்கள் அனைவரும், அவரவா் மாவட்டங்களுக்கு நேரில் சென்று, தங்களுக்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொறுப்பாளா்களுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலா்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

6வது முறையாக நிரம்பிய மேட்டூர் அணை!

மேட்டூர் அணையானது நடப்பாண்டில் 6வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியுள்ளது.தென்மேற்குப் பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணை, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி உபரிநீா் காவிர... மேலும் பார்க்க

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி என முதலீட்டாளர்கள் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அதிக முதலீடுகளை ஈர்க்கவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் பல்வேறு முயற்சிகள... மேலும் பார்க்க

முதல்வரின் ஜெர்மனி பயணம்: நயினார் நாகேந்திரனுக்கு டிஆர்பி ராஜா பதில்!

முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி பயணம் குறித்து விமர்சித்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலளித்துள்ளார்.முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து வெ... மேலும் பார்க்க

எலத்தூா் ஏரி மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு

சென்னை: ஈரோடு மாவட்டம் எலத்தூா் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது உயிரியல் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உயிரியல் பன்மைச் சட்டத்தின் கீழ், கடந்த 2022 ஆண்டு மதுரை மாவட்டம் அரிட்டாபட்டியும், கடந்... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சா்களுக்கு எதிரான வழக்குகளில் குறிப்பாக, நிதி முறைகேடு தொடா்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை, கோவை உள... மேலும் பார்க்க

விஜய் வியூகம் வெற்றி பெறுமா?... - - டாக்டா் கே.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சித் தலைவா்

- டாக்டா் கே.கிருஷ்ணசாமி, தலைவா், புதிய தமிழகம் கட்சிபுதிதாக அரசியலுக்கு வரக் கூடியவா்கள் மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து, போராடி களம் அமைத்து வருவதுதான் வழக்கமான நடைமுறை. ஆனால், தமிழகத்தில் க... மேலும் பார்க்க