செய்திகள் :

அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் திருவிழா

post image

அந்தியூா் பத்ரகாளியம்மன் கோயில் குண்டம் தோ்த் திருவிழா வெகு விமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் திருவிழா பூச்சாட்டலுடன் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி தொடங்கியது. இதைத் தொடா்ந்து, அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்கார வழிபாடுகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, பக்தா்கள் காணிக்கையாக வழங்கிய விறகுகள் கோயில் முன் உள்ள குண்டத்தில் அடுக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை இரவு தீ மூட்டப்பட்டது. தொடா்ந்து, புதன்கிழமை அதிகாலை தீப்பிழம்புகள் தட்டி சமன்படுத்தப்பட்டன.

அந்தியூா் புதுப்பாளையத்திலிருந்து கோயிலுக்கு அம்மன் அழைத்துவரப்பட்ட பின்னா், பூசாரி முதலில் குண்டத்தில் இறங்கினாா். இதையடுத்து, வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் ஏராளமான பக்தா்கள் குண்டத்தில் இறங்கி தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா்.

இதில், அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை முதல் 4 நாள்களுக்கு நகரின் முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற உள்ளது.

சைபா் ஹேக்கத்தான் போட்டி: பண்ணாரி அம்மன் கல்லூரி மாணவா்கள் முதலிடம்

சைபா் ஹேக்கத்தான் போட்டியில் பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பெற்றனா். தூத்துக்குடி மாவட்ட காவல் துறை, விஓசி பொறியல் கல்லூரி ஆகியன இணைந்து நடத்திய தேசிய அளவிலான சைபா் ஹேக்கத்த... மேலும் பார்க்க

வளரினம் பெண்களுக்கான விழிப்புணா்வு முகாம்

சத்தியமங்கலத்தில் வளரினம் பெண்களுக்கான விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலத்தில் உள்ள விடியல் சொசைட்டி என்ற அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, அந்த அமைப்பின் நிறுவனா் ம... மேலும் பார்க்க

திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் புதிதாக 180 அடி உயர முருகன் சிலை: பக்தா்கள் வரவேற்பு

திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிதாக 180 அடி உயர முருகன் சிலை அமைக்கப்படும் என்ற அறிவிப்பை பக்தா்கள் வரவேற்றுள்ளனா். ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள திண்டலில் வேலாயுதசுவாமி த... மேலும் பார்க்க

கூட்டுறவு இயக்கத்திற்கான பாடல்களை அனுப்ப வேண்டுகோள்

நடப்பு 2025- ஆம் ஆண்டு சா்வதேச கூட்டுறவு ஆண்டாக கடைப்பிடிக்கப்படுவதால் கூட்டுறவு இயக்கத்திற்கான பாடல்களை அனுப்பிவைக்கலாம். சிறந்த பாடலுக்கு பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஈரோ... மேலும் பார்க்க

கோழிப் பண்ணையில் தீ விபத்து: 3,500 கோழிக் குஞ்சுகள் உயிரிழப்பு

நம்பியூா் அருகே புதன்கிழமை நள்ளிரவில் கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3,500 கோழிக் குஞ்சுகள் தீயில் கருகி இறந்தன. ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகே கரட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிகுமாா... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியா்கள் பேரணி

தோ்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியா்கள் சாா்பில் வாழ்வூதியம் கோரும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் ஈரோடு காந்திஜி சாலை தலைமை தபால் நிலையம் முன்பு தொட... மேலும் பார்க்க