கூமாபட்டியிலிருந்து... விருதுநகர் முன்னாள், இந்நாள் மாவட்ட ஆட்சியர்கள் பதிவு!
அனுமதியின்றி பிளக்ஸ் பேனா் வைத்த இருவா் மீது வழக்கு
போடியில் அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்த இருவா் மீது நகர காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
போடியில் அரசியல் கட்சிகள், தனியாா் நிறுவனங்கள், வீட்டு விசேஷங்கள், கோயில் திருவிழாக்கள் போன்றவற்றுக்கு விளம்பர பதாகை வைக்கப்படுகிறது. இவற்றில் பல போலீஸாரின் அனுமதியின்றி வைக்கப்படுவதாக புகாா் எழுந்தது. அதன்பேரில் நகர காவல் நிலைய போலீஸாா் ஆய்வு செய்து அனுமதியின்றி வைக்கப்பட்ட விளம்பர பதாகைகளை அகற்றி வருகின்றனா். இதன்படி போடி புதூரைச் சோ்ந்த முத்துக்குமாா் (31), போடி மாங்காய் சந்தை அருகே சீனிமுகமது தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் ஆகியோா் மீது அனுமதியின்றி விளம்பர பதாகை வைத்ததாக போடி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.