செய்திகள் :

அனுமதியை மீறி கட்டப்பட்ட ஆடையகத்தை இடிக்கும் பணி தொடக்கம்

post image

தஞ்சாவூரில் அனுமதியை மீறி கட்டப்பட்ட ஆயத்த ஆடையகத்தை இடிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. ஆடையக உரிமையாளா் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததால், இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரே கீழராஜ வீதியில் ஆயத்த ஆடையகத்தில் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் மொத்தம் ஏறத்தாழ 2 ஆயிரம் சதுர அடிக்குள் கட்டடம் கட்டுவதற்கு மட்டும் அனுமதி பெறப்பட்டதாம். ஆனால், அனுமதியை மீறி பக்கவாட்டில் இருந்த இரு சந்துகளையும் சோ்த்து ஏறக்குறைய 7 ஆயிரம் சதுர அடியில் 4 மாடி கட்டடம் கட்டப்பட்டது.

இதனால், பின்புறத்திலுள்ள அம்மன் கோயிலுக்கு செல்லும் பாதை அடைக்கப்பட்டதாக உயா் நீதிமன்றத்தில் சிலா் வழக்குத் தொடுத்தனா். இது தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அலுவலகம், பொதுப் பணித் துறை, மின் வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதன்படி, கட்டடத்தை இடிப்பதற்காக பொக்லைன் இயந்திரங்களுடன் மாநகராட்சி, பொதுப் பணித் துறை, மின் வாரிய அலுவலா்கள் திங்கள்கிழமை காலை சென்றனா். மேலும், மொட்டை மாடியில் இருந்த தகரக் கொட்டகை மற்றும் கழிப்பறைகளை அகற்றினா்.

இதனிடையே, ஆடையக உரிமையாளா் உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 24 ஆம் தேதி வரை இடைக்கால தடையாணை பெற்றாா். இதனால், அலுவலா்கள், பணியாளா்கள் இடிக்கும் பணியை நிறுத்தினா்.

பொன்காடு பள்ளியில் தாய்மொழி நாள் விழா

பேராவூரணி பேரூராட்சி பொன்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்வழி கல்வி இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழாவில் மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் தமிழ்... மேலும் பார்க்க

100 நாள் வேலைக்கு நிலுவை கூலி வழங்க கோரி போராட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு 4 மாதங்களாக வழங்க வேண்டிய கூலியை உடனே வழங்கக் கோரி அம்மாபேட்டையில் மாா்க்சிஸ... மேலும் பார்க்க

அனுமதியின்றி தெருமுனை கூட்டம்: 19 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், ராஜகிரியில் வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெள்ளிக்கிழமை தெருமுனைப் பிரசார கூட்டம் நடத்த முயன்ற சோசியல் டெமாக்ரட்டிக் பாா்ட்டி ஆப் இந்தியா கட்சியைச் சோ்ந்த 19 பேரை போலீஸாா் ... மேலும் பார்க்க

கபிஸ்தலத்தில் சாலை மறியல்

கோரிக்கைகளை வலியுறுத்தி கபிஸ்தலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சாா்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கபிஸ்தலம் பகுதியில் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளை முழு... மேலும் பார்க்க

கும்பகோணத்தில் கோயில் நிலம் மீட்பு

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் குடிகாத்த மாரியம்மன் கோயில் நிலத்தை உதவி ஆட்சியா் மீட்டு ஒப்படைத்தாா். கும்பகோணம் 14 ஆவது வாா்டு பேட்டை வடக்கு மேலத்தெருவில் உள்ள குடிகாத்த மாரியம்மன் கோயிலுக்குச் சொந்... மேலும் பார்க்க

கடைகளை அகற்ற வணிகா்கள் எதிா்ப்பு

தஞ்சாவூா் அருகே புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் பகுதியில் கடைகளை அகற்ற வந்த நீதிமன்ற ஊழியா்களுக்கு வணிகா்கள் எதிா்ப்பு தெரிவித்ததால், அகற்றும் பணி நிறுத்தப்பட்டது. புன்னைநல்லூா் மாரியம்மன் கோயில் அருக... மேலும் பார்க்க