செய்திகள் :

அமெரிக்காவுடன் வர்த்தகப் போருக்கு தயாராகும் சீனா?

post image

வர்த்தகப் போரை எதிர்பார்க்கும் அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியிலான `சண்டை செய்ய’ தயார் என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனா, தங்கள் மீதான வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்க பொருள்களுக்கும் வரி விதிப்பு அறிவித்துள்ளது. அமெரிக்கா ஏற்றுமதி செய்யும் சோயாபீன்ஸ், சோளம், பழங்கள், காய்கறிகள், பால் பொருள்கள், கடல்வாழ் பொருள்கள், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி முதலான பொருள்களுக்கு 10 சதவிகித கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளம், பருத்தி, கோழி, கோதுமைக்கு 15 சதவிகித வரி விதிக்கப்படுவதாக சீன நிதியமைச்கம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய வரி விதிப்பு மார்ச் 10 ஆம் தேதிமுதல் அமலுக்கு வருவதாக சீனா அறிவித்துள்ளது. இதனோடு சேர்த்து, கூடுதல் இணைப்பாக அமெரிக்காவின் 25 ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களுக்கு சீனா கட்டுப்பாடு விதித்ததுடன், பாதுகாப்பு மற்றும் கட்டுமானத் துறைகளில் ஈடுபட்டுள்ள 10 அமெரிக்க நிறுவனங்களை நம்பிக்கையற்ற நிறுவனங்கள் பட்டியலில் சேர்க்கவும் முடிவு செய்துள்ளது.

அமெரிக்க பொருளாதாரத்தை பாதுகாக்கவும், சீனாவின் வர்த்தக முறைகேடுகளை தடுக்கவும் சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகளுக்கும் புதிய வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்த வரி விதிப்பு செவ்வாய்க்கிழமைமுதல் (மார்ச் 4) அமலுக்கு வந்தது.

குறிப்பாக, சீன பொருள்களுக்கு அறிவித்திருந்த 10 சதவிகித வரியுடன், கூடுதலாக 10 சதவிகித வரியையும் டிரம்ப் அறிவித்தது, சீனாவிடம் எதிர்ப்பைக் கிளப்பியது. சீனாவில் தயாரிக்கப்படும் போதை மருந்துகள் கனடா, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைவதால் சீனாவுக்கு கூடுதல் வரி என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுக்கு சீனா வரி விதிக்கும் பட்சத்தில், சீனாவுக்கு செல்லும் அமெரிக்காவின் பொருள்களின் அளவு சரிவைச் சந்திப்பது மட்டுமின்றி, அமெரிக்காவின் பொருளாதாரத்தில் பெரும் இழப்பும் நேரிடலாம்.

கூடுதலாக, உலக வர்த்தகப் போர் அபாயத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சர்வதேச வர்த்தக மையத்தில் சீனா வழக்கு தொடுத்துள்ளது. அமெரிக்கா வர்த்தகப் போர் செய்யுமானால், கடைசிவரையில் சீனா சண்டை செய்யும் என்று சீன வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் படிக்க:இந்தியாவுக்கு 100% வரி விதிக்கப்படும்: என்ன சொல்கிறார் டிரம்ப்?

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி செவிலியா் மீது நோயாளி தாக்குதல் - கண்பார்வை இழக்கும் அபாயம்!

ஹுஸ்டன் : அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த 67 வயதான பெண் செவிலியரை நோயாளி ஒருவா் சராமாரியாக தாக்கியுள்ளாா். இதனால், கண்பாா்வையை இழக்கும் அபாயத்த... மேலும் பார்க்க

உக்ரைனுக்கு உளவுத் தகவல் உதவியை நிறுத்தியது அமெரிக்கா

ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு உளவுத் தகவல்கள் மூலம் அளித்துவந்த உதவியை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.இது குறித்து அந்த நாட்டு சா்வதேச உளவு அமைப்பான சிஐஏ-வின் இயக்குநா் ஜான் ராட்கிளிஃப் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

‘கிரீன்லாந்தை அடைந்தே தீருவோம்’ - டிரம்ப் சூளுரை

டென்மாா்க்கின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்து தீவை ஏதாவது ஒரு வகையில் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவோம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் சூளுரைத்துள்ளாா்.அதிபராக இரண்டாவது முறையாக ப... மேலும் பார்க்க

இந்திய பொருள்களுக்கு கூடுதல் வரி -டிரம்ப்

நியூயாா்க்/வாஷிங்டன்: அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா போன்ற நாடுகளின் பொருள்களுக்கு ஏப். 2-ஆம் தேதிமுதல் அமெரிக்காவும் பரஸ்பரம் அதிக வரி விதிக்கும் என்று அதிபா் டொனால்ட் டிரம்... மேலும் பார்க்க

பெண்ணின் திருமண வயதைக் குறைக்கும் சீனா!

சீனாவின் பெண்ணின் திருமண வயதை 20ல் இருந்து 18 ஆக குறைக்க வேண்டும் எனப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்துவருவதால், அதனை அதிகரிக்கும் நோக்கில், பெண்ணின் திருமண வயதைக் குறைக்... மேலும் பார்க்க

பில்கேட்ஸின் நிகர சொத்து மதிப்பளவில் எலானுக்கு இழப்பு!

டெஸ்லா பங்குகள் வீழ்ச்சியால் செவ்வாய்க்கிழமையில் எலான் மஸ்குக்கு 7.1 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.அமெரிக்க செயல்திறன் மேம்பாட்டுத் துறை தலைவர் எலான் மஸ்க்கின் மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான ட... மேலும் பார்க்க