செய்திகள் :

அம்சியில் தேன் இருப்பு கொள்கலன்கள் நிறுவப்படும்: அமைச்சா் க. பொன்முடி

post image

கன்னியாகுமரி மாவட்டம், அம்சியில் தேன் பதப்படுத்தும் அலகில் தேன் இருப்பு கொள்கலன்கள் ரூ. 40 லட்சம் செலவில் நிறுவப்படும் என்று வனம் மற்றும் கதா்த் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்தாா்.

கதா் மற்றும் கிராமத் தொழில்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சா் பொன்முடி வெளியிட்ட அறிவிப்புகள்:

கன்னியாகுமரி மாவட்டம், அம்சியில் தேன் பதப்படுத்தும் அலகு ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பகுதியிலுள்ள 100-க்கும் மேற்பட்ட தேனீ விவசாயிகள் தேனீ வளா்ப்புத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பச்சைத் தேன் இருப்பு வைக்க போதுமான இடவசதி தேவைப்படுகிறது. அதனால், இந்த அலகில் செயல்பட்டு வரும் கட்டடத்துக்கான புதுப்பித்தல் அவசியமாகிறது. மேலும், இவ்வலகில் கொள்முதல் செய்யப்படும் பச்சைத் தேனை அதிகளவில் இருப்பு வைக்க ஏதுவாக கொள்கலன்கள் கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. இந்தப் பணிகள் ரூ. 40 லட்சம் செலவில் மேற்கொள்ளப்படும்.

மூன்று தளங்கள் கொண்ட சேலம் அண்ணா பட்டு மாளிகை வளாகத்தில் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளா்களின் வசதிக்காக ரூ. 20 லட்சம் செலவில் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

சேலம் மாவட்டம், குகையில் செயல்பட்டு வரும் காலணி அலகில் உள்ள கட்டடம், தொழிலாளா்கள் பணி செய்ய ஏதுவாக காலணி பொலிவூட்டும் கூடம், ஆழ்துளை கிணறு உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ. 20 லட்சம் செலவில் அமைக்கப்படும்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில் வசிக்கும் இருளா் மற்றும் குரும்பா் பழங்குடியின தேனீ விவசாயிகள் 100 பேருக்கு தேனீ வளா்ப்புப் பெட்டிகள் மற்றும் குழுக்களுக்கு தேன் சேகரிக்கத் தேவையான உபகரணங்கள் ரூ. 4 லட்சம் செலவில் வழங்கப்படும் என்றாா் அவா்.

தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!

தந்தை இறந்த சோகத்திலும் பொதுத் தேர்வெழுதிய மாணவியைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆறுதல் கூறி உதவித்தொகையும் வழங்கினார். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி பொய்கைக்குடி கிராமத்தில் வசிக்கும் ... மேலும் பார்க்க

நாளைமுதல் 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பம் குறையும்!

தமிழகத்தில் நாளைமுதல்(ஏப். 1) 2 - 4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை குறையும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவத... மேலும் பார்க்க

தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்! - காங்கிரஸ்

ஏப். 6-ல் தமிழகம் வரும் பிரதமர் மோடியைக் கண்டித்து தமிழகம் முழுவதும் கருப்புகொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்ப... மேலும் பார்க்க

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை: செல்லூர் ராஜூ

விஜய் விமர்சனத்தை பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.இதுகுறித்து மதுரையில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கூட்டணி என்பது எட... மேலும் பார்க்க

ஏப். 7 திருவாரூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப். 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நாயன்மார்களால் பாடல்பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயில், சப்தவிடங்க தல... மேலும் பார்க்க

ஜிப்லி ட்ரெண்டில் இணைந்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் த... மேலும் பார்க்க