செய்திகள் :

அயர்லாந்தில் இந்தியர்கள் மீது தொடரும் இனவெறித் தாக்குதல்கள்!

post image

அயர்லாந்தில் இனவெறித் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டதாக இந்தியர் ஒருவர் சமூக ஊடகத்தில் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, அவரின் சமூக ஊடகப் பதிவில்,

அயர்லாந்தில் பணிபுரியும் நான் (22), வேலை முடிந்ததும் பேருந்துக்காக பேருந்து நிறுத்தத்தில் காத்துக் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் காரில் வந்த சிலர் (அயர்லாந்து நாட்டவர்) என்னை அழைத்தனர்.

காரில் வந்தவர்கள் முகவரி ஏதேனும் கேட்பதற்காகத்தான் அழைப்பதாக நினைத்து, அவர்கள் அருகில் சென்றேன். ஆனால், அவர்கள் என்னுடைய கன்னங்கள் அழகாய் இருப்பதாகச் சொன்னார்கள். நானும் அவர்களின் விளையாட்டாய் நினைத்து, நன்றி கூறினேன்.

தொடர்ந்து, இரண்டாவது முறையாக அதே சமயத்தில் மீண்டும் வந்து, என்னை அழகானவர் என்று குறிப்பிட்டதுடன், சில தவறான வார்த்தைகளையும் கூறினர்.

இதனையடுத்து, மூன்றாவது முறையாக இனவெறித் தாக்குதல் வார்த்தைகளால் கத்தினர். நான் பேருந்தில் ஏறியபோதும், அவர்கள் அங்கேயே காத்திருந்தனர்.

என்னைப் போன்று வேறொருவருக்காகத்தான் அவர்கள் காத்துக் கொண்டிருந்தனர். இருப்பினும், அவர்கள் என்னைப் போன்று அமைதியாக இல்லாமல், எதிர்வினையைக் காட்டுபவர்களைத்தான் எதிர்பார்க்கின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

பாதிக்கப்பட்ட இந்தியரின் பதிவுக்கு பலரும் ஆறுதலும் நேர்மறையான வார்த்தைகளையும் கூறி, ஆற்றி வருகின்றனர். அதுமட்டுமின்றி, உண்மையான அயர்லாந்து நாட்டவர் யாரையும் காயப்படுத்த மாட்டார்கள் என்றுகூறி, பாதிக்கப்பட்ட இந்தியருக்கு சில அயர்லாந்து நாட்டவரும் ஆறுதல் கூறினர்.

அயர்லாந்தில் சமீபகாலமாக இந்தியர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இம்மாதத் தொடக்கத்தில், அயர்லாந்தில் வசித்து வரும் கேரள தம்பதியரின் 6 வயது சிறுமியின் மீது அயர்லாந்து சிறுவர்கள் இனவெறித் தாக்குதல் நடத்தினர். சிறுமியை மிரட்டியதுடன், சிறுமியின் அந்தரங்க உறுப்பிலும் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த ஒரு மாதத்திலேயே இந்தியர்கள் மீது 4 இனவெறித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... நாய் படும் பாடு!

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு!

ஜம்மு - காஷ்மீர் மட்டுமில்லாது வட மாநிலங்களான உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்திலும் வெள்ளப்பெருக்கால் பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது.உத்தரகண்ட்டில் தலைநகர் டேராடூனில் உள்ள மாநில அவசரநிலை செயல்பாட்டு மையம் வெ... மேலும் பார்க்க

அவசரநிலை காலத்தைவிட இன்று மோசமான நிலைமை: லாலு பிரசாத் யாதவ்

அவசரநிலை காலத்தைவிட இன்று மோசமான நிலையில் நாடு இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் விமர்சித்துள்ளார்.நடப்பாண்டு இறுதியில் நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்னதாக, அங்கு... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு: மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் - அமித் ஷா

ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இன்று(ஆக. 17) அதிகாலை மேகவெடிப்பால் பெய்த கனமழை, பெருவெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் மேகவெடிப்பு: 4 பேர் பலி; 6 பேர் காயம்!

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள ஜோத் காட்டி என்ற கிராமத்தில் இன்று(ஆக. 17) அதிகாலை மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் பலியாகினர் மற்றும் 6 பேர் காயமடைந்ததாக அதிகா... மேலும் பார்க்க

இந்தியா - அமெரிக்கா வர்த்தம்! பேச்சுவார்த்தை ஒத்திவைப்பா?

இந்தியாவுடனான அமெரிக்காவின் வர்த்தகப் பேச்சுவார்த்தை ரத்து செய்யும் வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தகம் தொடர்பாக, இம்மாதம் 25 முதல் 29 வரையில் பேச்சுவார்த்தை நடத்... மேலும் பார்க்க

தாயகம் திரும்பினார் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு வெற்றிப்பயணம் மேற்கொண்ட பின் சுபான்ஷு சுக்லா, முதல்முறையாக அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பினார்.தில்லி விமான நிலையம் வந்தடைந்த சுபான்ஷு சுக்லாவை, அவரது குடும்பத்தி... மேலும் பார்க்க