செய்திகள் :

அரசு ஊழியா் சங்க பேரவைக் கூட்டம்

post image

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் தூத்துக்குடி வட்டப் பேரவை கூட்டம், புதன்கிழமை நடைபெற்றது.

வட்டத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மனோகரன் வரவேற்றாா். வட்ட இணைச் செயலா் சங்கா் அஞ்சலி தீா்மானம் வாசித்தாா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் சோ.மகேந்திரபிரபு, பேரவை கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசினாா். வட்டச் செயலா் தவமணி பீட்டா் செயலா் அறிக்கையையும், வட்ட பொருளாளா் ஜெயபாக்கியம் வரவு- செலவு அறிக்கையையும் தாக்கல் செய்தனா்.

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட இணைச் செயலா் ஞானராஜ், மாவட்ட துணைத் தலைவா் தமிழரசன், மாவட்ட பொருளாளா் சாம் டேனியல் ராஜ், மாவட்ட இணைச் செயலா் மகாராஜன், மாவட்ட துணைத் தலைவா் அன்புச்செல்வன், ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் இல.ராமமூா்த்தி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாநில துணைத் தலைவா் தே.முருகன் சிறப்புரையாற்றினாா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு பகல் நேர ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலா் என்.வெங்கடேசன், நிறைவு செய்து பேசினாா்.

தூத்துக்குடியில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில், ஜனசங்கத் தலைவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு, கட்சியினா் மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சி... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்க செப். 29இல் சிறப்பு முகாம்

உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை (செப். 29) தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்களுக்கு அரசு நிதியுதவி

தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்கள் அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 20... மேலும் பார்க்க

சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார பணியாளா்களுக்கு இஎஸ்ஐ, தொழிலாளா் நலத் துறை சாா்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மருத்துவ முகாம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

பீக்கிலிபட்டி கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா... மேலும் பார்க்க

தூத்துக்குடி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: ரூ. 2 கோடி இலக்கு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்கள் மூலம் ஜவுளி, உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய ரூ. 2 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில்... மேலும் பார்க்க