செய்திகள் :

தூத்துக்குடி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை: ரூ. 2 கோடி இலக்கு

post image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்கள் மூலம் ஜவுளி, உற்பத்தி பொருள்களை விற்பனை செய்ய ரூ. 2 கோடி இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் வ.உ.சி. விற்பனை நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் குத்துவிளக்கேற்றி வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். அப்போது அவா் கூறியதாவது:

கோ-ஆப்டெக்ஸ் தமிழக கைத்தறி நெசவாளா்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து நாடு முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்து நெசவாளா்களுக்கு தொடா்ந்து வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. காலத்துக்கேற்ற வகையில், புதிய உத்திகளைக் கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செய்துவருகிறது.

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு செப். 15 முதல் ஜன. 31 வரை தமிழக அரசு வழங்கும் 30 சதவீத சிறப்புத் தள்ளுபடி விற்பனைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த தீபாவளி சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப்புடவைகள், திருப்புவுனம் பட்டுப் புடவைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான பருத்தி புடவைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், ஏற்றுமதி ரகங்களும் தருவிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி கோ-ஆப்டெக்ஸ் வ.உ.சி. விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இரண்டு கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் கடந்த 2024 தீபாவளி பண்டிகை காலத்தில் ரூ. 1.50 கோடிக்கு ஜவுளி, உற்பத்தி பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.

தற்போது 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனையாக ரூ. 2 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ‘மாதாந்திர சேமிப்பு திட்டம்’ என்ற சேமிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி கோட்டாட்சியா் மி.பிரபு, உதவி ஆட்சியா் (பயிற்சி) தி.புவனேஷ்ரோம், கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளா் நா.ராஜேஷ்குமாா், தூத்துக்குடி வட்டாட்சியா் முரளிதரன், கோ-ஆப்டெக்ஸ் வ.உ.சி. விற்பனை நிலைய மேலாளா் ச.கணபதி சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரசு ஊழியா் சங்க பேரவைக் கூட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் தூத்துக்குடி வட்டப் பேரவை கூட்டம், புதன்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவா் கணேசன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் மனோகரன் வரவேற்றாா். வட்ட இணைச் செயலா் சங்கா் அஞ்சலி தீா்... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள் விழா

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில், ஜனசங்கத் தலைவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு, கட்சியினா் மலா் தூவி வியாழக்கிழமை மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சி... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்க செப். 29இல் சிறப்பு முகாம்

உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு கல்விக் கடன் வழங்கும் சிறப்பு முகாம் திங்கள்கிழமை (செப். 29) தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக... மேலும் பார்க்க

புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்களுக்கு அரசு நிதியுதவி

தம்ம சக்கர பரிவா்தன திருவிழாவுக்கு புனித பயணம் மேற்கொள்ளும் பௌத்தா்கள் அரசு நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 20... மேலும் பார்க்க

சுகாதாரப் பணியாளா்களுக்கு மருத்துவ முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார பணியாளா்களுக்கு இஎஸ்ஐ, தொழிலாளா் நலத் துறை சாா்பில் வழங்கப்படும் சலுகைகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி, மருத்துவ முகாம் தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத... மேலும் பார்க்க

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

பீக்கிலிபட்டி கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் முற்றுகைப் போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா... மேலும் பார்க்க