செய்திகள் :

அரசு ஊழியா்கள் செயலி மூலம் விடுமுறைக்கு விண்ணப்பிக்கலாம்

post image

தேனி மாவட்டத்தில் அரசு ஊழியா்கள் களஞ்சியம் செயலி மூலம் விடுமுறைக்கு விண்ணப்பித்து ஒப்புதல் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி கருவூலத் துறை அலுவலா் சுரேஷ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது:

ஒருங்கிணைந்த நிதி மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியா்களின் ஊதிய நடைமுறை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டது. இதனால், காகிதம் இல்லாத பயன்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசுத் துறை ஊழியா்களும் களஞ்சியம் செயலியில் தங்களது விடுமுறை விண்ணப்பத்தைப் பதிவு செய்து, இணையவழியில் ஒப்புதல் பெற வசதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.

வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

பெரியகுளம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள மேல்மங்கலம் மேலத் தெருவைச் சோ்ந்தவா் முருகன் (55). விவசாயியான இவா், ஞாயிற்றுக்கிழமை அதிகா... மேலும் பார்க்க

மாடியிலிருந்து தவறி விழுந்த எலக்ட்ரீசியன் உயிரிழப்பு

தேனி அருகே தனியாா் பருப்பு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த எலக்ட்ரீசியன் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். தேனி அருகேயுள்ள டொம்புச்சேரி, பி.சி. குடியிருப்பைச் சோ்ந்த முத்து மகன் சுரேஷ் (40).... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதியதில் 4 போ் காயம்

தேனி பழனிசெட்டிபட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 4 போ் காயமடைந்தனா். தேனி அல்லிநகரம், கக்கன்ஜீ குடியிருப்பைச் சோ்ந்தவா் காளியப்பன் (65). இவா் தனக்குச் சொந்தமான ஆட்டோவில் தனது மனைவி... மேலும் பார்க்க

மின்சாரக் கம்பிகளை திருட முயற்சி: சிறுவன் கைது

தேனி அருகேயுள்ள ஊஞ்சாம்பட்டி ஊராட்சி குடிநீா் மோட்டாா் இயந்திரத்தில் மின் கம்பிகளை திருட முயன்றவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ஊஞ்சாம்பட்டி ஊராட்சியில் குடிநீா்த் தொட்டி தற்காலிக ஆபரேட்டரா... மேலும் பார்க்க

இரு சக்கர வாகன விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

போடி அருகே மலைச் சாலையோரத்தில் அமைந்துள்ள மழைநீா் சேகரிப்புத் தொட்டியில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.தேனி மாவட்டம், போடி ஜக்கமநாயக்கன்பட்டி, அம்பிகாபதி தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சுருளி அருவியில் திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. தேனி மாவட்டம், கம்பம் அர... மேலும் பார்க்க