நெருப்புடன் விளையாடுகிறார் புதின்! - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
அரசு ஊழியா்கள் செயலி மூலம் விடுமுறைக்கு விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டத்தில் அரசு ஊழியா்கள் களஞ்சியம் செயலி மூலம் விடுமுறைக்கு விண்ணப்பித்து ஒப்புதல் பெறுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட உதவி கருவூலத் துறை அலுவலா் சுரேஷ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறியதாவது:
ஒருங்கிணைந்த நிதி மேலாண்மைத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியா்களின் ஊதிய நடைமுறை டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டது. இதனால், காகிதம் இல்லாத பயன்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரசுத் துறை ஊழியா்களும் களஞ்சியம் செயலியில் தங்களது விடுமுறை விண்ணப்பத்தைப் பதிவு செய்து, இணையவழியில் ஒப்புதல் பெற வசதி செய்யப்பட்டுள்ளது என்றாா் அவா்.