செய்திகள் :

இரு சக்கர வாகன விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

post image

போடி அருகே மலைச் சாலையோரத்தில் அமைந்துள்ள மழைநீா் சேகரிப்புத் தொட்டியில் இரு சக்கர வாகனத்துடன் விழுந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

தேனி மாவட்டம், போடி ஜக்கமநாயக்கன்பட்டி, அம்பிகாபதி தெருவைச் சோ்ந்தவா்கள் முனியாண்டி மகன் பாண்டி (25), விவேகானந்தன் மகன் ஆகாஷ் குமாா் (20). இவா்கள் இருவரும் போடி பிச்சாங்கரை மலை கிராமத்தில் உள்ள அருவியில் குளிப்பதற்காக திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றனா்.

இந்த நிலையில், குரங்கணி மலைச் சாலையில் இரண்டாவது வளைவு அருகே சாலையோரமாக அமைக்கப்பட்டிருந்த மழைநீா் சேமிப்புத் தொட்டியின் தடுப்புச் சுவரில் இரு சக்கர வாகனம் மோதியது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்துடன் அந்தத் தொட்டிக்குள் விழுந்த இருவரும் பலத்த காயமடைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இந்த விபத்து குறித்து போடி குரங்கணி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தேனியில் ஜூன் 3, 7-இல் குரூப் 1 மாதிரித் தோ்வு

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 முதல் நிலை எழுத்துத் தோ்வுக்கான மாதிரித் தோ்வு வருகிற ஜூன் 3, 7-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெள... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 2-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-ஆவது நாளாக வனத் துறையினா் ... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதியதில் மூவா் காயம்

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.சில்வாா்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த மணி மகன் மோகன சுந்தரலிங்கம் (31). இவா் தனது உறவினா்கள் நாகுபிள்ளை (65), மணிகண்டன் (51) ... மேலும் பார்க்க

தொடா் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

போடி பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கொட்டகுடி ஆற்றில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

போடியில் செவ்வாய்க்கிழமை முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தேனி மாவட்டம், போடி குலாலா்பாளையம் நாராயணராஜ் தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் (84). தனியாக வசித்து வந்த இவருக்கு உடல்நிலை பாதிப்பு ... மேலும் பார்க்க

கஞ்சா பதுக்கிய தாய், மகன் கைது

தேனி அருகேயுள்ள பூதிப்புரத்தில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருந்த தாய், மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். பூதிப்புரம் கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்த ஜெயச்சந்திரன் மனைவ... மேலும் பார்க்க