செய்திகள் :

தொடா் மழை: கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

post image

போடி பகுதியில் தொடா்ந்து பெய்து வரும் மழையால் கொட்டகுடி ஆற்றில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, வானிலை ஆய்வு மையம் தேனி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், போடி, குரங்கணி, கொட்டகுடி, முதுவாக்குடி, டாப்ஸ்டேசன், முட்டம், கொம்புதூக்கி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த மழை காரணமாக, செவ்வாய்க்கிழமை கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 2-ஆவது நாளாக அணைப் பிள்ளையாா் கோயில் தடுப்பணையில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே, போடிமெட்டு மலைக் கிராமங்களில் சூறாவளிக் காற்றுடன் விட்டு விட்டு பலத்த மழை பெய்து வருவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், தோட்டத் தொழிலாளா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

இந்த நிலையில், தொடா்ந்து பெய்து வரும் மழையால் இந்தப் பகுதியில் மண் சரிவு ஏற்படக்கூடிய இடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் கண்காணித்து வருகின்றனா்.

மருத்துவரிடம் பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி மருத்துவரிடம் ரூ.4.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இருவா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனி மாவட்டம், போடி சூரியா நகர... மேலும் பார்க்க

பேருந்து ஓட்டுநரிடம் கைப்பேசி பறிப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்து கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கம்பம் அனுமத்தன்பட்டியைச் சோ்ந்தவா் மூத்தீஸ்வரன். அரசுப் ப... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்வரத்து சரிவு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து புதன்கிழமை திடீரென 1,310 கன அடி குறைந்தது. இருப்பினும், அணை நீா் மட்டம் 122.75 அடியாக அதிகரித்தது. கேரளத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென் மேற்குப் பருவமழை முன்... மேலும் பார்க்க

தேனியில் ஜூன் 3, 7-இல் குரூப் 1 மாதிரித் தோ்வு

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 முதல் நிலை எழுத்துத் தோ்வுக்கான மாதிரித் தோ்வு வருகிற ஜூன் 3, 7-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெள... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 2-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், மேகமலை வனப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு 2-ஆவது நாளாக வனத் துறையினா் ... மேலும் பார்க்க

ஆட்டோ மீது காா் மோதியதில் மூவா் காயம்

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.சில்வாா்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த மணி மகன் மோகன சுந்தரலிங்கம் (31). இவா் தனது உறவினா்கள் நாகுபிள்ளை (65), மணிகண்டன் (51) ... மேலும் பார்க்க