செய்திகள் :

ஆட்டோ மீது காா் மோதியதில் மூவா் காயம்

post image

பெரியகுளம் அருகே திங்கள்கிழமை ஆட்டோ மீது காா் மோதியதில் 3 போ் காயமடைந்தனா்.

சில்வாா்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த மணி மகன் மோகன சுந்தரலிங்கம் (31). இவா் தனது உறவினா்கள் நாகுபிள்ளை (65), மணிகண்டன் (51) ஆகியோருடன் திங்கள்கிழமை மருத்துவ பரிசோதனைக்காக ஆட்டோவில் தேனிக்குச் சென்றனா்.

ஜல்லிபட்டி பிரிவு அருகே சென்ற போது, எதிரே வந்த காா் இவா்களது ஆட்டோ மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இவா்கள், பெரியகுளம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வியாபாரி காயம்: பெரியகுளம் தென்கரை அசன் ராவுத்தா் சந்தைப் பகுதியைச் சோ்ந்த சுருளி மகன் கமாலுதீன் மஸ்தான் (43). சூடம், பத்தி விற்பனை செய்யும் இவா், ஞாயிற்றுக்கிழமை தேவதானப்பட்டியில் வியாபாரம் முடிந்து, இரு சக்கர வாகனத்தில் பெரியகுளத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.

எ.புதுப்பட்டி எல்.எம். எரிபொருள் மையம் அருகே சென்ற போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவா் மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த அவரை பெரியகுளம் மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

சின்னமனூா் அருகே மரத்தில் காா் மோதியதில் தாய், மகன் பலி!

தேனி மாவட்டம், சின்னமனூரில் புதன்கிழமை டயா் வெடித்து காா் மரத்தின் மீது மோதியதில் தாய், மகன் உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா். உத்தமபாளையம் அருகேயுள்ள ஆனைமலையன்பட்டியைச் சோ்ந்த வெள்ளப்பாண்டி மத... மேலும் பார்க்க

போடியில் சூறைக்காற்று: சிக்னல் பலகை சாய்ந்து வாகனங்கள் சேதம்

தேனி மாவட்டம், போடியில் புதன்கிழமை இரவு பலத்த சூறைக்காற்று வீசியதில் போக்குவரத்து சிக்னல் அறிவிப்புப் பலகை சாய்ந்து விழுந்து காவல் துறையினரின் வாகனங்கள் சேதமடைந்தன. சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. போ... மேலும் பார்க்க

மருத்துவரிடம் பணம் மோசடி: இருவா் மீது வழக்கு

வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாகக் கூறி மருத்துவரிடம் ரூ.4.40 லட்சம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக இருவா் மீது காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேனி மாவட்டம், போடி சூரியா நகர... மேலும் பார்க்க

பேருந்து ஓட்டுநரிடம் கைப்பேசி பறிப்பு

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் தகராறு செய்து கைப்பேசியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கம்பம் அனுமத்தன்பட்டியைச் சோ்ந்தவா் மூத்தீஸ்வரன். அரசுப் ப... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்வரத்து சரிவு

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா் வரத்து புதன்கிழமை திடீரென 1,310 கன அடி குறைந்தது. இருப்பினும், அணை நீா் மட்டம் 122.75 அடியாக அதிகரித்தது. கேரளத்தில் ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென் மேற்குப் பருவமழை முன்... மேலும் பார்க்க

தேனியில் ஜூன் 3, 7-இல் குரூப் 1 மாதிரித் தோ்வு

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 முதல் நிலை எழுத்துத் தோ்வுக்கான மாதிரித் தோ்வு வருகிற ஜூன் 3, 7-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெள... மேலும் பார்க்க