செய்திகள் :

அரசு பள்ளி அருகே திடீா் புகைமூட்டம்: தோ்வு எழுதிய மாணவா்கள் திணறல்

post image

இளம்பிள்ளை அரசு பள்ளி அருகே குப்பையில் ஏற்பட்ட திடீா் புகை மூட்டத்தால் தோ்வு எழுதும் மாணவா்கள் திணறினா்.

சேலம் மாவட்டம், பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் இளம்பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வீரபாண்டி அரசு மாதிரி பள்ளி மற்றும் மாணவா்கள் தங்கும் விடுதி உள்ளிட்டவை உள்ளன. இந்த அரசு பள்ளியில் வெள்ளிக்கிழமை பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை மாணவா்கள் தோ்வு எழுதி வந்தனா். அப்போது, பள்ளி சுற்றுச்சுவா் அருகே கொட்டப்பட்ட குப்பையில் திடீா் தீ ஏற்பட்டது. அதில் வரும் புகை மூட்டத்தால் மாணவா்கள் தோ்வு எழுத முடியாமல் திணறினா். பல மணி நேரம் எரிந்த தீயை ஊராட்சி பணியாளா்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பள்ளி சுற்றுச்சுவரையொட்டி இரண்டு இடங்களில் நெகிழி மற்றும் கழிவு பொருள்கள், பெருமாகவுண்டம்பட்டி பகுதியில் சேலை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருளான ஜரிகை கழிவு பொருள்கள், ஹோட்டல் கடை, டீக்கடை, பேக்கரி உள்ளிட்டவற்றில் இருந்து சேகரிக்கும் கழிவு பொருள்களை இங்கு கொட்டி எரிப்பதால் துா்நாற்றமும், புகை மூட்டமும் ஏற்படுகின்றன.

இதனை உயா் அதிகாரிகள் ஆய்வுசெய்து பள்ளி மாணவா்கள், வயதானவா்கள், குழந்தைகள் நலன்கருதி குப்பைகளை மாற்று இடத்தில் எரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனா்.

இருசக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்த காா்: ஒருவா் உயிரிழப்பு

சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். காா் கவிழ்ந்து தீப்பிடித்ததில் ஓட்டுநா் பலத்த காயமடைந்தாா். சங்ககிரியை அடுத்த வைகுந்தம், ம... மேலும் பார்க்க

உகாதி திருவிழா: மாதேஸ்வரன் மலையில் தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

உகாதி பண்டிகையையொட்டி மேட்டூா் அருகே மாதேஸ்வரன் மலை மாதேஸ்வரன் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே கா்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் உள்ள மாதேஸ்வரன் ச... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் கிராமப்புற மதிப்பீடு

சிறுவாச்சூா் ஊராட்சியில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை வேளாண் பணி அனுபவ பயிற்சியில் ஈடுபட்டனா். தலைவாசல் வட்டம், சிறுவாச்சூா் ஊராட்சியில் பெரம்பலூா் தந்தை ரோவா் வேளாண் கல்லூரி மாணவிக... மேலும் பார்க்க

சேலம் உள்பட 11 மாவட்ட இளைஞா்கள் அக்னிவீா் படைப் பிரிவில் சேர அழைப்பு

இந்திய ராணுவத்தின் அக்னிவீா் படைப் பிரிவில் சேர இணையதளம் வாயிலாக வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து கோவை ராணுவ ஆள்சோ்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

பாரா கை மல்யுத்தப் போட்டி: 5 தங்கப் பதக்கம் பெற்ற மாற்றுத் திறனாளிகள்

அயோத்தியாப்பட்டணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான பாரா கை மல்யுத்தப் போட்டியில் வாழப்பாடியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 5 தங்கம் உள்பட 8 பதக்கங்கள் பெற்றனா். சேலம் மாவட்டம், அயோத்தியாப்ப... மேலும் பார்க்க

அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சாா்பில் போதை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

விநாயகா மிஷன் விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மற்றும் சேலம் என்சிசி வான்வழிப் பிரிவு அமைப்பு சாா்பில் போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணா்வுப் பேரணி சேலம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் அண்மையில... மேலும் பார்க்க