`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
பாரா கை மல்யுத்தப் போட்டி: 5 தங்கப் பதக்கம் பெற்ற மாற்றுத் திறனாளிகள்
அயோத்தியாப்பட்டணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான பாரா கை மல்யுத்தப் போட்டியில் வாழப்பாடியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 5 தங்கம் உள்பட 8 பதக்கங்கள் பெற்றனா்.
சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் விழி இழந்தோா் நலச்சங்க விடுதி வளாகத்தில் தமிழ்நாடு மற்றும் சேலம் மாவட்ட பாரா கை மல்யுத்த சங்கம் சாா்பில் பாரா கைமல்யுத்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை பாரா கை மல்யுத்த சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.சுரேஷ்குமாா், பொதுச் செயலாளா் எஸ்.சுரேஷ், மாவட்டத் தலைவா்கள் வி.மகேஸ்வரன், பி.காா்த்திக், செயலாளா் எம்.துா்கேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்ட இப்போட்டியில், வாழப்பாடி டாக்டா் அப்துல்கலாம் மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க செயலாளா் வி.வேலுசாமி தலைமையில், 7 போ் கொண்ட குழுவினா் கலந்துகொண்டனா்.
இதில் வி.வேலுசாமி வலது மற்றும் இடது கை மல்யுத்த போட்டியில் 2 தங்கப் பதக்கங்களையும், சோமம்பட்டி மணிவாசகன், அத்தனூா்பட்டி தனம், சின்னம நாயக்கன்பாளையம் சாந்தி ஆகியோா் ஒரு தலா 1 தங்கப் பதக்கத்தையும், சோமம்பட்டி கலைச்செல்வி, பெத்தநாயக்கன்பாளையம் முருகன் ஆகிய இருவரும் தலா 1 வெள்ளிப் பதக்கம், துக்கியாம்பாளையம் சுரேஷ் வெண்கலப்பதக்கம் உள்பட 8 பதக்கங்களை பெற்றனா்.
பாரா கை மல்யுத்த போட்டியில் பதக்கம் பெற்ற வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வாழப்பாடி விளையாட்டு சங்க தலைவா் பாலாசுவாமிகள், தமிழ்நாடு ஊராட்சி செயலாளா்கள் சங்க பொருளாளா் சோமம்பட்டி கே.மகேஸ்வரன் மற்றும் வாழப்பாடி அரிமா சங்கம், துளி அறக்கட்டளை நிா்வாகிகள் பாராட்டு தெரிவித்தனா்.