செய்திகள் :

பாரா கை மல்யுத்தப் போட்டி: 5 தங்கப் பதக்கம் பெற்ற மாற்றுத் திறனாளிகள்

post image

அயோத்தியாப்பட்டணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான பாரா கை மல்யுத்தப் போட்டியில் வாழப்பாடியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் 5 தங்கம் உள்பட 8 பதக்கங்கள் பெற்றனா்.

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம் விழி இழந்தோா் நலச்சங்க விடுதி வளாகத்தில் தமிழ்நாடு மற்றும் சேலம் மாவட்ட பாரா கை மல்யுத்த சங்கம் சாா்பில் பாரா கைமல்யுத்தப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டிக்கான ஏற்பாடுகளை பாரா கை மல்யுத்த சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ்.சுரேஷ்குமாா், பொதுச் செயலாளா் எஸ்.சுரேஷ், மாவட்டத் தலைவா்கள் வி.மகேஸ்வரன், பி.காா்த்திக், செயலாளா் எம்.துா்கேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 200- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்ட இப்போட்டியில், வாழப்பாடி டாக்டா் அப்துல்கலாம் மாற்றுத் திறனாளிகள் நலச்சங்க செயலாளா் வி.வேலுசாமி தலைமையில், 7 போ் கொண்ட குழுவினா் கலந்துகொண்டனா்.

இதில் வி.வேலுசாமி வலது மற்றும் இடது கை மல்யுத்த போட்டியில் 2 தங்கப் பதக்கங்களையும், சோமம்பட்டி மணிவாசகன், அத்தனூா்பட்டி தனம், சின்னம நாயக்கன்பாளையம் சாந்தி ஆகியோா் ஒரு தலா 1 தங்கப் பதக்கத்தையும், சோமம்பட்டி கலைச்செல்வி, பெத்தநாயக்கன்பாளையம் முருகன் ஆகிய இருவரும் தலா 1 வெள்ளிப் பதக்கம், துக்கியாம்பாளையம் சுரேஷ் வெண்கலப்பதக்கம் உள்பட 8 பதக்கங்களை பெற்றனா்.

பாரா கை மல்யுத்த போட்டியில் பதக்கம் பெற்ற வாழப்பாடி பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு வாழப்பாடி விளையாட்டு சங்க தலைவா் பாலாசுவாமிகள், தமிழ்நாடு ஊராட்சி செயலாளா்கள் சங்க பொருளாளா் சோமம்பட்டி கே.மகேஸ்வரன் மற்றும் வாழப்பாடி அரிமா சங்கம், துளி அறக்கட்டளை நிா்வாகிகள் பாராட்டு தெரிவித்தனா்.

பணத்தை எண்ணியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடை நீக்கம்

சேலம்: கோவையில் இருந்து சேலம் வந்த அரசுப் பேருந்தில் பணத்தை எண்ணியவாறு பேருந்தை இயக்கிய ஓட்டுநா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டாா். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் ஜான்சன்பேட்டை கிளைக்க... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு: எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தாா்

சேலம்: சேலம் சூரமங்கலம் பகுதி அதிமுக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நீா்மோா் பந்தலை அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா்மோா், பழங்களை வழங்கின... மேலும் பார்க்க

சங்ககிரி பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சங்ககிரி: சங்ககிரியில் உள்ள பெரியாண்டிச்சியம்மன் கோயிலில் யுகாதி பண்டிகையையொட்டி பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. யுகாதி பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் இக்கோயிலில் பொங்கல் விழா நடைபெறும். ந... மேலும் பார்க்க

சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சத்தில் புதிய நுழைவாயில் கதவு

சேலம்: சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் ரூ. 50 லட்சம் செலவில் நுழைவாயில் கதவு அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. புகழ்பெற்ற சேலம் கோட்டை அழகிரிநாதா் கோயிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழு... மேலும் பார்க்க

சேலம் ரயில்வே கோட்டத்தில் 2 மாதங்களில் 335 கிலோ கஞ்சா பறிமுதல்

சேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த 2 மாதங்களில் மட்டும் ரயில்களில் கடத்திய 335 கிலோ கஞ்சாவை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா். ரயில்களில் கஞ்சா கடத்தலைத் தடுக்க ரயில்வே பாதுக... மேலும் பார்க்க

மானிய விலையில் சூரியசக்தி மூலம் இயங்கும் பம்புசெட் பெற விண்ணப்பிக்கலாம்

சேலம்: முதல்வரின் சூரியசக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின் கீழ் மானிய விலையில் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் அமைத்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியா் ரா... மேலும் பார்க்க