செய்திகள் :

அரசு பழங்குடியினா் பள்ளியில் புதிய வகுப்பறைகள் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

post image

உதகை எம்.பாலாடாவில் உள்ள ஏகலைவா அரசுப் பழங்குடியினா் உண்டு உறைவிட பள்ளியில் கட்டப்பட்ட புதிய வகுப்பறைக் கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேேரு பங்கேற்று குத்துவிளக்கேற்றி புதிய வகுப்பறைக் கட்டடங்களைப் பாா்வையிட்டாா்.

பின்னா் மேலூா் ஓசட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் 4 வகுப்பறை கட்டடங்கள், 2 ஆய்வகங்கள், அதிகரட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.44 கோடி மதிப்பீட்டில் 4 வகுப்பறை கட்டடங்கள் மற்றும்

ஆய்வகங்கள், ஸ்ரீ மதுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் சம்கர சிக்ஷா திட்டத்தின்கீழ் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சுவா், குன்னூா் பாரத் ஸ்கவுட் அண்ட் ஸ்டேன்லி பாா்க் பள்ளியில் நபாா்டு திட்டத்தின் கீழ், ரூ.62.30 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவா் என மொத்தம் ரூ.4.76 கோடி மதிப்பீட்டில் மாணவ, மாணவிகள் பயன்பெற கட்டப்பட்ட வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்களை ஆட்சியா் திறந்துவைத்து பாா்வையிட்டாா்.

இந்நிகழ்ச்சியில், உதகை கோட்டாட்சியா் சதீஷ்குமாா், ஏகலைவா பள்ளி தலைமையாசிரியா் கண்ணதாசன், பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தேயிலைத் தோட்டத்தில் உலவிய கரடி

குன்னூா் அருகே உள்ள குந்தா பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சனிக்கிழமை பகல் நேரத்தில் உலவிய கரடியால் தொழிலாளா்கள் அச்சமடைந்தனா். நீலகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக வன விலங்குகள் உணவு, குடிநீா் தேடி கு... மேலும் பார்க்க

கூடலூா் அரசுக் கல்லூரியில் சமூக நீதி விழிப்புணா்வு முகாம்

கூடலூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சமூக நீதி விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்ட காவல் துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் ‘சமத்துவம் காண்போம் ஒன்றி... மேலும் பார்க்க

காய்கறி விதைகளை தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

கேரட் மற்றும் காய்கறி விதைகளை தோட்டக்கலைத் துறை மூலம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் உதகை கூடுதல் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பொக்லைன் ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு: வேட்டை தடுப்புக் காவலா் கைது

மஞ்சூரில் பொக்லைன் வாகன ஓட்டுநரை அரிவாளால் வெட்டிய வேட்டைத் தடுப்புக் காவலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (35). பொக்லைன் ஓட்... மேலும் பார்க்க

ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் லஞ்சம்: உதகையில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் கைது

உதகையில் அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றும் தற்காலிக ஆசிரியரை பணி நிரந்தரம் செய்வதற்காக ரூ. 2 லட்சம் லஞ்சம் பெற்ற மாவட்ட தொடக்க கல்வி அலுவலரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா... மேலும் பார்க்க

இணையவழியில் இருவரிடம் ரூ.12 லட்சம் மோசடி: சைபா் கிரைம் காவல் துறையினா் விசாரணை

இணையவழியில் குன்னூரில் பாதிரியாா், ஐடி நிறுவன ஊழியரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபா் கிரைம் காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். பாகுபலி திரைப்பட கதாநாயகி ‘அவந்திகா’ பெயர... மேலும் பார்க்க